Cow தாத்தானு தான் கூப்பிடுவான்.. வெளிநாட்டில் என் போஸ்டர்.. ராமராஜன் நெகிழ்ச்சி..!

ரஜினி, கமலுக்கு தமிழ் சினிமாவில் தனி இடம் இருந்தாலும் ஒரு காலத்தில் இவர்களுக்கு போட்டியாக ஒரு நடிகர் இருந்துள்ளார் என்பதை அனைவராலும் நம்பமுடியாத உண்மை. அவருடைய போதாத காலம் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக சினிமாவில் கவனம் செலுத்த முடியாமல் படங்களில் நடிப்பதை தவிர்த்து விட்டார் என்பது குறிப்பிடத்த்க்கது.

இல்லையென்றால் தற்போது ரஜினி, கமல் போன்ற நடிகர்களின் இடங்களில் கண்டிப்பாக அவரும் ஒரு நடிகர் இடம்பெற்றிருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்த காலகட்டத்தில் இவரைப் பார்த்து டாப் முன்னணி நடிகர்களே பயந்து நடுங்குவார்களாம். அந்த நடிகரின் படத்திற்கு போட்டியாக இவர்களது படம் வெளியிட்டால் கண்டிப்பாக தோல்வி நிச்சயம் தான்.

அந்த அளவுக்கு அவரின் ரசிகர்களின் பேர் ஆதரவை நடிகர் பெற்றவர் வேறு யாரும் இல்லை ராமராஜன் தான். இவரது நடிப்பில் வெளியான கரகாட்டக்காரன், எங்க ஊரு பாட்டுக்காரன், செண்பகமே செண்பகமே, காவல்காரன் போன்ற பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து பட்டிதொட்டி எங்கும் இவரது பாடல்கள் பட்டையை கிளப்பியது. முன்னணி நடிகர்களை ஒப்பிடும்போது இவரது படங்கள் தான் அந்த காலத்தில் அதிக ஹிட் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும் பன்முகத்திறமை கொண்டவராக வலம் வந்த ராமராஜன் 1987ம் ஆண்டு நடிகை நளினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 13 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஜோடி விவாகரத்து பெற்று பிரிந்தது. இவர்களுக்கு அருணா, அருண் என இரட்டை குழந்தைகளும் உள்ளனர். இருவருமே திருமணமாகி செட்டில் ஆகிவிட்டனர்.

தற்போது சினிமாவில் கம்பேக் கொடுத்து சாமானியன் என்கிற திரைப்படத்தில் நடித்து வரும் ராமராஜன், சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய பேரன் செய்த நெகிழ்ச்சி சம்பவம் குறித்து மனம்திறந்து பேசியுள்ளார். நடிகர் ராமராஜனின் மகன் அருண் ஸ்காட்லாந்தில் ஆடிட்டராக பணிபுரிந்து வருகிறாராம்.

அங்கு அவர் குடும்பத்துடன் உணவகம் ஒன்றிற்கு சென்றபோது அங்கு தமிழ் பட போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்ததையும், இதில் ஹைலைட்டே அவரது தந்தை நடித்த கரகாட்டக்காரன் பட போஸ்டரும் தனியாக வைத்திருந்ததை பார்த்து வியந்துபோனாராம். இதைப்பார்த்து ஓட்டல் உரிமையாளரிடம் அருண் போய் பேச, அவரும் தனது தந்தையின் ஊரான சொக்கம்பட்டியை சேர்ந்தவர் என தெரியவர, அந்த ஓட்டல் உரிமையாளரும், நீங்க பார்க்க அப்பா ராமராஜன் மாதிரியே இருக்கிங்க என பேசினாராம்.

அங்கிருந்த போஸ்டர்களையெல்லாம் ராமராஜனின் பேரன் வீடியோ எடுத்து அவருக்கு அனுப்பினாராம். செண்பகமே செண்பகமே பாட்டு பார்த்ததில் இருந்து ராமராஜனை அவரது பேரன் cow தாத்தானு தான் கூப்பிடுவாராம். அவர் என்னுடைய போஸ்டரை வெளிநாட்டில் பார்த்து மிகவும் சந்தோஷப்பட்டதாகவும், அந்த வீடியோ பார்க்கையில் எனக்கும் சந்தோஷமாக இருந்தது. நான் நடிச்சதே கொஞ்ச படங்களாக இருந்தாலும், அது வெளிநாடு வரை சென்றிருப்பதை பார்க்கையில் மகிழ்ச்சியாக இருந்ததாக ராமராஜன் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

UpdateNews360 Rajesh

Recent Posts

வீட்டு சுவர் ஏறி விசாரணை நடத்திய போலீஸ் : சரமாரிக் கேள்வி கேட்ட பெண்… ஷாக் வீடியோ!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி…

24 hours ago

எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?

நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…

1 day ago

கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…

1 day ago

பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?

தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…

1 day ago

கள்ளக்காதலியை பார்க்க கோவை வந்த ‘துபாய் காதல் மன்னன்’ : உல்லாசத்தால் உயிர் போன சோகம்!

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

1 day ago

தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?

அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…

1 day ago

This website uses cookies.