மலையாள படங்களின் மாஸ் ஹீரோவான நடிகர் ஃபகத் பாசில் மிகவும் டெடிகேஷனான நடிகர் என்பது நம்மில் பலருக்கும் தெரிந்த ஒன்று தான். தன் தந்தையின் அறிமுகத்துடன் சினிமாவில் வந்த இவர் படத்திற்கு படம் புது வித்தியாசமாய் நடிப்பில் மிரள வைத்தார். எந்த கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் அதை நன்றாக உளவாங்கி மிகச்சிறப்பாக நடித்து பெயர் வாங்குவார்.
மேலும் படிக்க: ஒரு லிமிட் இருக்கு.. தடவுறதுக்கு ஆயிரம் இடமும் இருக்கு.. கொந்தளித்து பேசிய சன் டிவி பிரபலம்..!
நடிப்பு அரக்கனாக இவரை பார்த்து மிரண்டுபோனார்கள் சக மலையாள நடிகர்கள். தமிழில் கூட சூப்பர் டீலக்ஸ், வேலைக்காரன், புஷ்பா, விக்ரம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். தற்போது மாமன்னன் படத்தில் நடித்துள்ளார்.
மேலும் படிக்க: நடந்து முடிந்த 2-ம் கல்யாணம்… ராக்கெட் வேகத்தில் வைரலாகும் விஜயின் புகைப்படம்..!
இந்நிலையில், படம் வெளியாகி கலையான விமர்சனத்தை பெற்று வந்தது. ஆனால், படம் தியேட்டரில் வெளியாகி கொண்டாடப்பட்டதை விட தற்போது ஓடிடியில், வெளியான பிறகு ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் கொண்டாடி வந்தனர். அதிலும், ரத்னவேலு என்ற வில்லன் ரோலில் நடித்த பகத் பாசிலின் கேரக்டரை தான் கொண்டாடி வந்தனர்.
இந்நிலையில், தற்போது 41 வயதாகும் பஹத் பாசில் தனக்கு ஒரு நோய் வந்திருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்து இருப்பதாக தெரிவித்துள்ளார். ADHD என கூறப்படும் Attention-deficit/hyperactivity disorder என்ற நோய் அவருக்கு வந்திருக்கிறதாம். பொதுவாக குழந்தைகளுக்கு தான் இந்த நோய் வரும். ஆனால், பெரியவர்களுக்கு வந்தால் அதை சரி செய்வது கொஞ்சம் கடினமாக இருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
பொதுவாக இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மிகவும் ஹைப்பராக இருப்பார்கள். அவர்களால் ஒரு இடத்தில் இருந்து சரியாக வேலை செய்ய முடியாது. அமைதியாக ஒரே இடத்தில் இருந்து வேலை செய்ய முடியாது. மேலும், மறதி படபடப்பு போன்ற அறிகுறிகள் அவர்களுக்கு இருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நோயிலிருந்து குணமடைய தியானம் மனநல தெரப்பிகள் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுரை கூறுகின்றனர். மேலும், இந்த நோயினால், பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் மறதியின் காரணமாக பொருட்களை ஒழுங்காக வைத்திருக்க வேண்டும் என்ற கவனம் இல்லாமல் இருப்பார்கள். பிரபல விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டனுக்கும் இந்த அரியவகை நோய் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
வேலூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுகுழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் மாவட்டத்தலைவர் வெங்கடேசன்,…
This website uses cookies.