அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம் அஜித் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தாலும் பொதுவான ரசிகர்களுக்கு இத்திரைப்படம் உவப்பாக இல்லை. “இது இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போல் உள்ளது” என படம் பார்த்தவர்கள் கூறினார்கள், ஆனால் அஜித் ரசிகர்களோ, “இது எங்களுக்காக எடுக்கப்பட்ட திரைப்படம்” என சப்போர்ட்டுக்கு வந்தனர்.
இத்திரைப்படத்தில் பல பழைய பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருந்தது. அந்த வகையில் இளையராஜா இசையமைத்த மூன்று பாடல்கள் இதில் இடம்பெற்றிருந்த நிலையில் இளையராஜா தரப்பில் இருந்து ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு “குட் பேட் அக்லி” திரைப்படத்தின் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இவ்வாறு பல சர்ச்சைகளையும் தாண்டி இத்திரைப்படம் ரூ.300 கோடி வசூல் செய்தது.
“குட் பேட் அக்லி” திரைப்படத்தை தொடர்ந்து அஜித்தின் 64 ஆவது திரைப்படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரனே இயக்கவுள்ளார். அஜித்குமார் தற்போது பல நாடுகளில் கார் பந்தயங்களில் பங்கேற்று வருகிறார். வருகிற நவம்பர் மாதம் முதல் அஜித் திரும்பவும் சினிமாவில் ஈடுபாடு காட்டவுள்ளார். அந்த வகையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நவம்பரில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இத்திரைப்படத்திற்காக ஆதிக் ரவிச்சந்திரனின் சம்பளம் குறித்த ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அதாவது இத்திரைப்படத்திற்காக ஆதிக் ரவிச்சந்திரனுக்கு ரூ.12 கோடி சம்பளம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாம். இதற்கு முன் அவர் இயக்கிய “குட் பேட் அக்லி” திரைப்படத்திற்காக அவர் ரூ.3 கோடியே சம்பளம் பெற்றார் என கூறப்பட்ட நிலையில் தற்போது அவரது சம்பளம் ரூ.9 கோடி உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே போல் அஜித்குமாருக்கு இத்திரைப்படத்திற்காக ரூ.180 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாம். இத்திரைப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
பல வருடக் கனவு கடந்த 2016 ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க புதிய கட்டிடத்தின் பணிகள் தொடங்கப்பட்டது. தென்னிந்திய…
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.