சினிமா / TV

தனுஷ் படத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விமானப்படை? அதிரடி முடிவெடுத்த படக்குழுவினர்!

பதிலடி கொடுத்த தனுஷ்

“இட்லி கடை” திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ் “குபேரா” திரைப்படத்தில் நடித்துள்ளார். சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் தனுஷுடன் நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் வருகிற ஜூன் 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தின் அட்டகாசமான டிரெயிலரும் சமீபத்தில் வெளியானது. 

இந்த நிலையில் இத்திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய தனுஷ் தன் மீதான வதந்திகளுக்கு பதிலடி கொடுத்தார். “நீங்கள் என்னை பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் வதந்திகளை பரப்புங்கள். எனது ஒவ்வொரு திரைப்படமும் வெளியாவதற்கு முன்பு என்னை குறித்த எதிர்மறையான விஷயங்களை பரப்புங்கள். ஆனால் எனது ரசிகர்களின் துணையோடு நான் என் வழியில் போய்க்கொண்டே இருப்பேன். இவர்கள் எனது ரசிகர்கள் மட்டுமல்ல. 23 வருடங்களாக என் கூடவே பயணித்த தோழர்கள். நான்கு வதந்திகளை பரப்பி இதனை காலி செய்துவிட வேண்டும் என நீங்கள் நினைத்தால் அதை விட முட்டாள்த்தனம் வேறு இல்லை” என பேசினார். இவர் பேசியது இணையத்தில் வைரல் ஆனது. 

தனுஷ் படத்திற்கு முட்டுக்கட்டை

“குபேரா” திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ், “தேரே இஷ்க் மே” என்ற ஹிந்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் தனுஷ் விமானப் படை அதிகாரியாக நடிக்கிறாராம். இந்த நிலையில் இத்திரைப்படத்தின் சில காட்சிகளை லே, லடாக் ஆகிய பகுதிகளில் உள்ள விமானப்படைக்கு சொந்தமான பகுதிகளில் படமாக்க படக்குழுவினர் அனுமதி கேட்டிருந்தனராம். 

ஆனால் அவர்கள் அனுமதி கொடுக்கவே இல்லையாம். எனினும் படக்குழுவினர் மீண்டும் மீண்டும் அனுமதி கேட்டு முறையிட, அக்டோபர் மாதத்திற்கு பின் வாருங்கள், அப்போது பார்த்துக்கொள்ளலாம் என கூறிவிட்டனராம். “அக்டோபர் வரை காத்திருக்க முடியாது” என்று யோசித்த படக்குழு மும்பை நகரில் லடாக்கில் உள்ள விமானப் படையை போலவே ஒரு செட்டை அமைத்து அதில் அக்காட்சிகளை படமாக்க தற்போது முடிவு செய்துள்ளனராம். இவ்வாறு ஒரு தகவல் வெளிவந்துள்ளது. 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.