சினிமா / TV

இந்த விஷயத்தை தடை பண்ணுங்க ப்ளீஸ்- உயர்நீதிமன்ற படிகளை ஏறிய நடிகை ஐஸ்வர்யா ராய்!

உலக அழகி…

உலக அழகி என்ற பட்டத்தை பெற்ற ஐஸ்வர்யா ராய், “இருவர்” திரைப்படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர். அதனை தொடர்ந்து பாலிவுட்டில் பட்டையை கிளப்பிய ஐஸ்வர்யா ராய் தமிழில் அவ்வப்போது “ஜீன்ஸ்”, “எந்திரன்”, “இராவணன்” போன்ற படங்களில் தலைகாட்டினார். அதனை தொடர்ந்து “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் அவர் ஏற்று நடித்த நந்தினி கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்த நிலையில் ஐஸ்வர்யா ராய் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுமதி இன்றி பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். 

வழக்கின் சாராம்சம் என்ன?

இது குறித்து அவர் அளித்த மனுவில், தனது அனுமதியின்றி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் விளம்பரங்களில் பயன்படுத்தப்படுகிறது எனவும் வணிக நோக்கங்களுக்காக தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனுமதி இன்றி பயன்படுத்தப்படுவதை தடை செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இந்த வழக்கில் ஐஸ்வர்யா ராய் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜர் ஆன வழக்கறிஞர் சந்தீப் சேதி, “ஐஸ்வர்யா ராயின்  மார்ஃபிங் செய்யப்பட்ட படங்கள் AI மூலமாக உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. இது முற்றிலும் உண்மைக்கு மாறானவை. ஐஸ்வர்யா ராயின் முகத்தை வைத்து பணம் சம்பாதிக்கிறார்கள்” என வாதாடினார். இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், ஐஸ்வர்யா ராயின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுமதியின்றி பயன்படுத்துவதை தடுக்க இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என உறுதியளித்துள்ளது. 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.