தமிழ் சினிமாவின் முன்னனி நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் டஸ்கி ஸ்கின் அழகை கொண்டு ஹீரோயினுக்கு ஏத்த பார்முலாவையே மாற்றி எழுதி யாரும் அசைக்க முடியாத இடத்தை பிடித்துவிட்டார். இவர் சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு… நிகழ்ச்சித் தொகுப்பாளராக முதலில் தனது பணியை ஆரம்பித்தார். கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதை அடுத்து, நீதானா அவன் படத்தில் நடித்து அறிமுகமானார்.
அட்டகத்தி திரைப்படம் தான் இவரை பிரபலமாக்கியது. அதன் பின்னர் வடசென்னை, காக்கா முட்டை, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் , தர்மதுரை உள்ளிட்ட திரைப்படங்கள் அவரது கெரியருக்கு மைல் கல்லாக அமைந்தது.
விஜய் சேதுபதி, தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட ஒரு சில ஹீரோக்கள் மட்டுமே தனக்கு வாய்ப்பு கொடுத்ததாகவும், மற்ற நடிகர்களின் படங்களில் தனக்கு வாய்ப்பு வழங்கவில்லை என்றும், காக்கா முட்டை படம் வந்தபோது பலரும் பாராட்டினார்கள் எனவும், ஆனால் ஒன்றை வருடம் தான் வாய்ப்பு இல்லாமல் இருந்ததாகவும், அதனால் விரக்தியின் உச்சத்திற்கே சென்றதாகவும், அதன்பின் தான் பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் படியான படங்களில் நடிக்க தொடங்கி தற்போது வரை 15 படங்களில் நடித்து விட்டதாகவும், என்றாலும் தற்போது வரை எந்த ஹீரோவும் தனக்கு வாய்ப்பு தர முன்பு வரவில்லை என்று ஐஸ்வர்யா ராஜேஷ் வருத்தத்துடன் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர். தேசிய விருது, ஹாலிவுட் நடிகர் என்று உச்சத்தில் இருக்கும் தனுஷ் பல சர்ச்சையிலும் சிக்கினார். அதிலும், நடிகர் தனுஷ் என்றாலே நடிகைகளுடன் நெருக்கம் தான் என்று இணையத்தில் பரவி பரப்பரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதன் காரணமாகத்தான் தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து நடந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் வடசென்னை படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் அவருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர். இப்படம் முடிந்தப்பின் பெரிய ஹீரோ ஆவீங்க. தன்னுடன் தனுஷ் ஜோடி சேர்ந்து நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் கேட்டுக்கொண்டாராம்.
ஆனால் அதற்கு தனுஷ், உன்கூடவா ஐய்யய்யே? நோ வே என்று இழுத்து சில நடிகைகளுடன் தான் நடிப்பேன் என்று கூறியிருந்தாராம். அந்த நடிகைகளில் பெயரையும் ஐஸ்வர்யா கனா படத்தின் ஆடியோ லான்சில் நடிகர் தனுஷ் முன்பே தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், வட சென்னை படத்திற்கு பிறகு நடிகர் தனுஷிடம், “வட சென்னை படத்தை தவிர வேறு எந்த படத்திலும் உங்களுடன் சேர்ந்து நடிக்க வில்லையே, நான் என்ன மோசமான நடிகையா? என்று அவரிடம் பலமுறை கேட்டு இருக்கிறேன். அதற்கு அவர், “அப்படி இல்லை. உங்களுடைய நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். வட சென்னை திரைப்படத்தில் அந்த ரோலில் நடிக்க வைப்பதற்காக எல்லாவற்றையும் சேர்த்து வைத்திருந்தேன்” என்று தனுஷ் கூறியதாக ஐஸ்வர்யா ராஜேஷ் பேட்டியில் தற்போது பகிர்ந்துள்ளார்.
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…
This website uses cookies.