தமிழ் சினிமாவின் முன்னனி நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் டஸ்கி ஸ்கின் அழகை கொண்டு ஹீரோயினுக்கு ஏத்த பார்முலாவையே மாற்றி எழுதி யாரும் அசைக்க முடியாத இடத்தை பிடித்துவிட்டார். இவர் சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு… நிகழ்ச்சித் தொகுப்பாளராக முதலில் தனது பணியை ஆரம்பித்தார். கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதை அடுத்து, நீதானா அவன் படத்தில் நடித்து அறிமுகமானார்.
அட்டகத்தி திரைப்படம் தான் இவரை பிரபலமாக்கியது. அதன் பின்னர் வடசென்னை, காக்கா முட்டை, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் , தர்மதுரை உள்ளிட்ட திரைப்படங்கள் அவரது கெரியருக்கு மைல் கல்லாக அமைந்தது. சில நாட்களுக்கு முன்னர் வெளியான தி கிரேட் இந்தியன் கிச்சன் என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதையடுத்து சொப்பன சுந்தரி திரைப்படம் வெளியாகி தோல்வி அடைந்தது. கடைசியாக ஃபர்ஹானா என்ற படத்தில் நடித்து இஸ்லாமிய மக்களின் வெறுப்புக்கு ஆளாகினார்.
இந்நிலையில் பேட்டி ஐஸ்வர்யா ராஜேஷ் பற்றி பேசிய கலா மாஸ்டர் தனக்கு கொடுமையான துயரங்களை பற்றி பேசியுள்ளார்.அதாவது ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் சிலர், நடன மாஸ்டர் ஆனார்கள். சிலர் சீரியல்களில் நடித்து வருகின்றனர். ஆனால், ஐஸ்வர்யா ராஜேஷ் அவளது கனவை எட்டி பிடிக்கும் சமயத்தில் கொடுமையான துயரத்தை அனுபவித்தார்.
ஆம், அவர் மிகவும் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்த பெண். ஐஸ்வர்யாவின் தாயும் தந்தையும் நடனக் கலைஞர்கள், ஐஸ்வர்யா ராஜேஷுக்கு நான்கு உடன்பிறப்புகள், இதில் மூத்த மகன் 12 வயதிலேயே தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தார். அதன் பின் இரண்டாவது மகன் விபத்து ஒன்றில் சிக்கி உயிரிழந்தார். இந்த இரண்டு மரணமும் ஐஸ்வர்யாவின் குடும்பத்தை பெரிதும் பாதித்தது. சகோதரர் விபத்தில் சிக்கி உயிரிழந்ததால் மானாட மயிலாட நிகழ்ச்சியை விட்டு ஐஸ்வர்யா வெளியேறினார். ஆனால் அதன் பின்னர் மீண்டும் அடுத்த சீசனில் கலந்து கொண்டு வெற்றியாளரானார். தனது கனவை அடையவேண்டும் என வெறிகொண்டு உழைத்து இந்த இடத்திற்கு வந்துள்ளார் என்று கலா மாஸ்டர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
வேலூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுகுழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் மாவட்டத்தலைவர் வெங்கடேசன்,…
மனதை கவர்ந்த நடிகை :”அருவி” திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அதிதி…
சித்தூர் மாவட்டம், குப்பம் நகராட்சி எல்லையில் உள்ள நாராயணபுரத்தில், கடனை வசூலிக்க ஒரு பெண்ணை மரத்தில் கட்டி, தாக்கிய மனிதாபிமானமற்ற…
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…
வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…
நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…
This website uses cookies.