ஐஸ்வர்யாவும் தனுஷூம் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள் என அனைவரும் நினைத்துக் கொண்டிருந்த நிலையில் இருவரும் பிரிவதாக கடந்த ஆண்டு ஜனவரி 17ந் தேதி அறிக்கை வெளியிட்டுவிட்டு பிரிந்தனர்.
இதனால், ஆரம்பத்தில் மன உளைச்சலில் இருந்த ஐஸ்வர்யா அவ்வப்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஐஸ்வர்யா தனுஷூடன் சேர்த்துவிட வேண்டும் என்பதற்காக மாறன் படப்பிடிப்பு நடந்த போது அவர் தங்கிய அதே ஓட்டலியே ஐஸ்வர்யாவும் தங்கினார். ஆனால், அப்போதும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளவில்லை.
தனுஷின் பிறந்தநாளில் இருவரும் சேர்ந்து விடுவார்கள் என்று சொல்லப்பட்டது. ஆனால், அதுவும் நடக்காமல் போனது. யாத்ரா மற்றும் லிங்காவிற்கான இருவரும் விவாகரத்து செய்யாமல் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். நேரம் கிடைக்கும் போதெல்லாம் இருவரும் தங்கள் குழந்தைகளுடன் இருக்கின்றனர். இருந்தாலும், அம்மா, அப்பா பிரிந்து இருப்பது குழந்தைகளுக்கு நிச்சயம் பெரிய வலியாகவே இருக்கும்.
மகளை நினைத்து வருத்தப்பட்ட சூப்பர் ஸ்டார் தற்போது ஜெயிலர் படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அதே போல ஐஸ்வர்யா, கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து லால் சலாம் படத்தை இயக்க உள்ளார். இப்படத்தில், விஷ்ணு விஷால், விக்ராந்த் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க ரஜினிகாந்த் கௌரவ வேடத்தில் நடிக்க உள்ளார்.
இந்நிலையில், ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவரும் பிரிந்து ஓராண்டாகி உள்ளது. ஆரம்பத்தில் மன அழுத்தத்தில் இருந்த ஐஸ்வர்யா தினமும் கடுமையான உடற்பயிற்சி செய்தும், புத்தகம் வாசித்தும் தனது கவலையை மறந்துள்ளார்.
10 ஆண்டுகளாக தான் தொடர்ந்து வரும் புத்தகம் படிப்பதை இன்னும் நிறுத்தவில்லை, சிறுவயதில் இருந்தே வாசிப்பு என்பது என் வாழ்வின் ஒரு அங்கமாகிவிட்டது. தி சீக்ரெட் என்ற புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு காரில் செல்லும் போது கூட படித்தவாறு செல்கிறேன் என்ற பதிவினை பகிர்ந்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.