என்னது அப்பா ரஜினி என்னை திட்டினாரா? ” லால்சலாம்” ஷூட்டிங் ஸ்பாட் போட்டோக்களை வெளியிட்ட ஐஸ்வர்யா!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தை தொடர்ந்து ரஜினி தனது மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு திருவண்ணாமலையில் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து தற்போது மும்பையில் ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகளை படமாக்குக்கி வருகிறார்கள்.

இப்படத்தில் மொய்தீன் பாயாக ரஜினி நடித்து வருகிறார். அண்மையில் இப்படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகி கேலிக்கும், கிண்டலுக்கும் உள்ளானது. அதில் மும்பை பின்னணியில் இஸ்லாமிய தோற்றத்தில் ரஜினிகாந்த் நடந்து வருவது போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மொய்தீன் பாய் ஆட்டம் ஆரம்பம் எனவும் போஸ்டரில் குறிப்பிட்டிருந்தனர். அதே சமயம், சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் எனவும் பதிவிட்டுள்ளனர். இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக ரஜினி இப்படத்தில் நடித்துள்ளார். இருந்தாலும் அவரது தோற்றம் ட்ரோல் செய்யப்பட்டது.

இதனிடையே ரஜினி மகள் ஐஸ்வர்யாவுடன் லால்சலாம் படத்தின் படப்பிடிப்பில் சண்டைபோட்டு திட்டிவிட்டு சென்னை திரும்பிவிட்டதாக செய்திகள் இணையத்தில் வெளியாகியது. காரணம் இப்படத்தின் ஷூட்டிங்காக ரஜினி மும்பை சென்று வெறும் மூன்று நாட்கள் மட்டுமே நடித்தாராம். மற்ற நேரம் அவருக்கு வேலையே இல்லாமல் சும்மாவே இருந்தாராம். இதனால் ஐஸ்வர்யாவின் நிர்வாகத்தில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த ரஜினிகாந்த் ஐஸ்வர்யாவிடம் கறாராக பேசிவிட்டு மும்பையில் இருந்து திரும்பியாக செய்திகள் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் ஐஸ்வர்யா, ரஜினிகாந்த் லால்சலாம் படத்தில் நடித்து வரும் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோக்களை வெளியிட்டு வதந்தி செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக இதைப்பார்த்த ரஜினியின் ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.

விஜய்யை வைத்து பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் பீஸ்ட் படத்தை இயக்கி பெரும் தோல்வியை கொடுத்தார் நெல்சன். அதன் பின்னர் தற்போது ரஜினிகாந்த் வைத்து ஜெயிலர் படத்தை இயக்கி வருகிறார். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘லால் சலாம்’ என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் நடித்து வருகின்றனர். முஸ்லீம் நபராக இப்படத்தில் நடித்துள்ள ரஜினி மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் நடித்துள்ளார்.

இதற்காக ரஜினி மும்பைக்கு புறப்பட்டு சென்று அப்படத்தின் ஆரம்ப வேளைகளில் ஆர்வம் காட்டி வந்தார். இந்நிலையில் இப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டிருந்தது. இதில் கலவரம் வெடிக்க, ரஜினிகாந்த் இஸ்லாமியர் போல தாடி வைத்து, தொப்பி அணிந்து, கண்ணாடி அணிந்து ஸ்டைலாக வர மாதிரி போஸ்டர் வடிவமைக்கப்பட்டு இருந்தது.ஆனால், சமீபத்தில் வெளியான இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி சோசியல் மீடியா பக்கத்தில் வைரலாகி சிலர் போஸ்டர் மோசமாக இருக்கிறது என்று விமர்சனம் செய்தனர்.

இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங்காக ரஜினி மும்பை சென்று மூன்று நாட்கள் மட்டுமே ஷூட்டிங் சென்றாராம். மற்ற நேரம் சும்மாவே இருந்துள்ளாராம். இதற்கு காரணம் ஐஸ்வர்யாவின் நிர்வாகத்தில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த ரஜினிகாந்த் ஐஸ்வர்யாவிடம் கரராக பேசிவிட்டு மும்பையில் இருந்து திரும்பி சென்னை வந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Ramya Shree

Recent Posts

நித்யானந்தா இந்த நாட்டில்தான் இருக்கிறார்- நீதிமன்றத்தில் சீக்ரெட்டை போட்டுடைத்த சீடர்!

2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…

13 hours ago

படம் வெளியாகனும்னா இதை பண்ணிதான் ஆகணும்- ஆமிர்கானுக்கு ஆர்டர் போட்ட சென்சார் போர்டு?

ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…

15 hours ago

ஆங்கிலம் பேசுபவர்களே! இதை எழுதி வச்சிக்கோங்க- சவால் விட்ட அமித்ஷா!

டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…

15 hours ago

தக் லைஃப் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் கிரிமினல் வழக்கு?- உச்சநீதிமன்றம் அதிரடி

தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…

16 hours ago

குபேரா படத்தில் இத்தனை வெட்டுக்களா? படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…

17 hours ago

24 மணிநேரமும் டாஸ்மாக், நீ குடிச்சே செத்துப்போ- திமுக முன்னாள் எம்எல்ஏ  சர்ச்சை பேச்சு…

“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…

17 hours ago

This website uses cookies.