தமிழ் திரையுலகை பொருத்தவரை நடிகரை தலைவர் இடத்தில் வைத்து ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு மக்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்துள்ளவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தான். 80ஸ்களில் தொடங்கி தற்போது வரை சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் அவர்கள், பாட்ஷா, படையப்பா, அண்ணாமலை என தனது ஸ்டைல் மூலம் மக்கள் மனங்களை வென்றவர்.
முக்கியமாக திறமை இருந்தும் வாய்ப்பில்லாமல் தவித்து வந்த பல தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் போன்றோருக்கு ரஜினிகாந்தின் படங்கள் திருப்புமுனையை ஏற்படுத்தி தந்தது. பீஸ்ட் படத்தின் மூலம் நெகட்டிவ் ரிவியூஸ் பெற்ற நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தற்போது சூப்பர்ஸ்டார் நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெயிலர். இப்படம் அவருக்கு செம கம்பேக் ஆக அமைந்துள்ளது. இவருக்கு ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா என இரு மகள்கள் உள்ளனர்.
முன்னதாக, சூப்பர் ஸ்டார் மகள் என்று அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தற்போது, இவர் இயக்கத்தில் லால் சலாம் திரைப்படத்தில் ரஜினி நடித்துள்ளார். எட்டு வருடம் கழித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் படம் இன்று ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அவரை தொடர்ந்து இரண்டாம் மகள் சௌந்தர்யா கோச்சடையான் விஐபி 2 படத்தினை தொடர்ந்து தற்போது மற்றொரு படத்தையும் இயக்க திட்டமிட்டுள்ளாராம். அப்படத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். தயாரிப்பாளர் தானு தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் புதிய படத்தினை சௌந்தர்யா இயக்க உள்ளார். இந்த படத்திற்கு, இசையமைக்க இசையமைப்பாளர் அனிருத்தின் பெயரை தாணு கூறியுள்ளார், ஆனால், கடுப்பாகி சௌந்தர்யா அனிருத் எல்லாம் வேண்டாம் என்று கூறி கண்டிஷனும் போட்டு இருக்கிறாராம். அனிருத் அதிகமாக ஆட்டிட்யூட் காட்டி வருவதாகவும், ஆதனால் வேண்டாம் என்ற காரணத்தை கூறி ஜீவி பிரகாஷ் குமாரையும் புக் செய்ய முடிவெடுத்துள்ளாராம் சௌந்தர்யா ரஜினிகாந்த்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.