போதையில் தகராறு செய்த பிரபல நடிகர்.. நடிகரின் மனைவியிடம் கதறிய ஐஸ்வர்யா ராஜேஷ்: இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

Vjவாக தனது வாழ்க்கையை தொடங்கி, தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர்தான் இந்த ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் தற்போது சாமி ஸ்கொயர், வட சென்னை ஆகிய படங்கள் வெளியாகி இருந்தன.

விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். இவரின் நடிப்பு திறமைக்கு கலைமாமணி விருதை கொடுத்து அரசு இவரை கெளரவ படுத்தியுள்ளது. கமர்சியல் படங்கள் நடித்தாலும் கதாபாத்திரத்திற்கு முக்கியம் தரும் விதமாக பல படங்களில் நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். தன்னுடைய ஒவ்வொரு படத்திற்கும் மெனக்கெடும் ஐஸ்வர்யா ராஜேஷின் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

பிரபல நடிகர் ரோபோ சங்கரின் மனைவிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவரிடம் உங்களுடைய கணவர் குடித்துவிட்டு போதையில் என்னிடம் தகராறு செய்து கொண்டிருக்கிறார். இவர் குடித்துவிட்டு வண்டி ஓட்டி வந்திருக்கிறார். உடனடியாக காவல் நிலையத்துக்கு வாருங்கள் என்று பிரபல நடிகர் ரோபோ சங்கரின் மனைவியிடம் பிராங்க் செய்த வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பொதுவாக நடிகர் நடிகைகள் இது போன்ற பிராங்க் நிகழ்ச்சிகளை அவ்வப்போது நடத்துவது வாடிக்கை. அந்த வகையில், பிரபல யூடியூப் சேனல் பேட்டி ஒன்றில், ரோபோ சங்கரின் மனைவிக்கு போன் செய்த ஐஸ்வர்யா ராஜேஷ் நான் தி-நகர் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து ஷாலினி பேசுகிறேன். உங்களுடைய கணவர் குடித்துவிட்டு வண்டி ஓட்டி வந்திருக்கிறார். இதனால் ஒருவர் காயம் அடைந்து இருக்கிறார். நாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசுகிறார்.

இதனை கேட்டு பதறிய ரோபோ சங்கரின் மனைவி, மேடம் அவர் எப்போதும் தெளிவாகத்தான் இருப்பார் என்று யாராவது நண்பர்கள் சந்தித்து இருப்பார் அதனால்தான் இப்படி ஆகிவிட்டது என்று பேசுகிறார். ஆனால், தொடர்ந்து அவருடைய மனைவியை மிரட்டிக்கொண்டே இருந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு கட்டத்தில் நான் பிராங்க் செய்கிறேன் என்று அவரிடம் கூறியுள்ளார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.