சினிமா / TV

கனவெல்லாம் பலிக்குதே…காதலியை கரம்பிடித்த டிமான்டி காலணி பட இயக்குனர்…திரண்டு வந்த திரைப்பிரபலங்கள்…!

தமிழ் சினிமாவில் ஆரம்பகாலத்தில் ஏ ஆர் முருகதாஸிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து பின்பு இயக்குனராக அவதாரம் எடுத்தவர் அஜய் ஞானமுத்து,இவர் முதன்முதலில் அருள்நிதியை வைத்து டிமான்டி காலணி படத்தை இயக்கி மிகப்பெரிய வெற்றியை ருசித்தார்.

அதன்பின்பு நயன்தாரா,அதர்வா,விஜய்சேதுபதியை வைத்து திரில்லர் ஆன இமைக்கா நொடிகள் படத்தை இயக்கி வெற்றி அடைந்தார்.அதன்பிறகு விக்ரமை வைத்து எடுத்த படமான கோப்ரா அவருக்கு எதிர்ப்பார்த்த அளவுக்கு வெற்றியை கொடுக்க வில்லை.இதனை தொடர்ந்து டிமான்டி காலணி இரண்டாம் பாகத்தை இயக்கி தரமான கம் பேக் கொடுத்தார்.

இதையும் படியுங்க: ஜெயிலர் 2-வில் சிவராஜ்குமாருக்கு பதில் இவரா…ஸ்கெட்ச் போட்டு தூக்கிய நெல்சன்..!

இப்படி பல திரில்லர் படங்களை இயக்கி வளர்ந்து வரும் நிலையில்,தன்னுடைய நீண்ட நாள் காதலியான ஷிமோனாவை சென்னையில் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்துள்ளார்.இவருடைய திருமணத்திற்கு நடிகர் விஷால்,விக்ரம்,இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் உட்பட பல திரைபிரபலங்கள் நேரில் சென்று அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இவர் தற்போது விஷாலை வைத்து தன்னுடைய அடுத்த படத்தை இயக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது,மேலும் நடிகை பூஜா ஹெக்கடே நடிப்பில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு திரைப்படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.இவருடைய திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.