உயிருக்கு போராடியபோது கூட அஜித் உதவல… போண்டாமணியின் கடைசி கண்ணீர் பேட்டி!

தமிழ் சினிமாவில் 90களில் ஆரம்பித்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றவர் காமெடி நடிகர் போண்டாமணி. ‘சுந்தரா டிராவல்ஸ்’, ‘மருதமலை’, ‘வின்னர்’, ‘வேலாயுதம்’, ‘ஜில்லா’ உள்ளிட்ட படங்களில் இவரது காமெடி பிரபலம்.

சமீபத்தில் இரண்டு கிட்னிகளும் செயலிழந்து சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை எடுத்துவந்தார். இவர் சிகிச்சைக்காக பணமின்றி மிகவும் கஷ்டப்படுவதாக வீடியோ ஒன்று வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

இதனையடுத்து தமிழக முதல்வர் உட்பட திரைப்பிரபலங்கள் வரை அவரவர் தங்களால் முடிந்த பண உதவி செய்து உதவினார்.போண்டா மணியின் நிலையை அறிந்து மறைந்த நடிகர் மனோபாலா, நடிகர் பார்த்திபன், நடிகர் தனுஷ் என்று பல்வேறு பிரபலங்கள் உதவி செய்தனர். இதனை தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக தொடர்ந்து நலமுடன் வீடு திரும்பி சில நாட்கள் உடல்நலத்துடன் இருந்தார்.

இருந்தாலும் தொடர் சிகிச்சைக்கு போதிய பணம் இல்லாததால் அவரது உடல்நிலை மோசமடைந்து உயோருக்கு போராடிக்கொண்டிருந்த நிலையில் மேலும், சில பிரபலங்களிடம் உதவிகள் கேட்டார். முன்பொரு காலத்தில் 1996ல் வெளியான மைனர் மாப்பிள்ளை படத்தில் அஜித்தை ஹீரோவாக போட சொல்லி சிபாரிசு செய்ததே போண்டாமணி தானாம்.

முதலில் ரஞ்சித் நடிக்க பின்னர் ஏதோ சில காரணங்களுக்காக அவர் வெளியேற அஜித் நடித்து அப்படம் வெளியானது. இது குறித்து அஜித், நான் சினிமாவில் பெரிய ஹீரோ ஆனது நிச்சயம் உங்களுக்கு உதவிகள் செய்கிறேன் என வாக்கு கொடுத்து பின்னர் எந்த ஒரு படத்திலும் அவருக்கு வாய்ப்புகள் கொடுக்கவில்லை. சிட்டிசன் படத்தில் கூட இயக்குனரா பார்த்து தான் கூப்பிட்டாராம்.

அப்பவும் அஜித்…. பரவாயில்லையே எப்படியோ உள்ள வந்துட்டீங்களே. இப்படி ஹீரோவை கேட்பதை விட இயக்குனரிடம் வாய்ப்பு கேளுங்கள் கிடைக்கும் என அறிவுரை கூறினாராம். பின்னர் உடல்நிலை மோசமடைந்து சிகிச்சை பணமில்லாமல் இருந்தபோது அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திராவிடம் பல முறை முறையிட்டும் எந்த உதவியும் செய்யவில்லை என கண்ணீருடன் சில மாதங்களுக்கு முன்னர் பேட்டி கொடுத்த போண்டாமணி இன்று சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். அவரது மறைவு திரையிலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

UpdateNews360 Rajesh

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.