சினிமா / TV

“இளையராஜா ஒரு பண பைத்தியம்”… தானாக ஆஜர் ஆகி அடிவாங்கும் அஜித் ரசிகர்கள்! ஏன் இப்படி?

இது ரசிகர்களுக்கான படம்…

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் கடந்த வாரம் வெளியான நிலையில் இத்திரைப்படம் பார்த்த வெகுஜன ரசிகர்கள் பலரும் “படம் முழுவதுமே இன்ஸ்டா ரீல்ஸ் போல் இருக்கிறது. கதையே இல்லை” என கூறி விமர்சித்து வந்தனர். ஆனால் ஒரு பக்கம் “இது அஜித் ரசிகர்களுக்கான திரைப்படம். வேறு எதையும் எதிர்பார்த்து படத்திற்கு போகவேண்டாம்” என்று அஜித் ரசிகர்கள் பதிலளித்து வந்தார்கள். 

இந்த நிலையில் தற்போது இசைஞானி இளையராஜா, தனது பாடல்களை அனுமதி இன்றி “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பயன்படுத்தியதாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த செய்தி இணையத்தில் அஜித் ரசிகர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது. 

ஆஜர் ஆகி அடிவாங்கும் அஜித் ரசிகர்கள்…

இந்த நிலையில் இளையராஜா நோட்டீஸ் கொடுத்த செய்தியை பகிர்ந்த செய்தி நிறுவனங்களின் கம்மெண்ட் பக்கங்களில் அஜித் ரசிகர்கள் பலரும் இளையராஜாவை மிகவும் தரம் தாழ்ந்த வார்த்தைகளால் தாக்கி வருகின்றனர். “பெருந்தன்மையற்ற இளையராஜா”, “பணப் பைத்தியம் இளையராஜா” என்று அஜித் ரசிகர்கள் பலரும் இளையராஜாவை கடுமையாக திட்டி வருகின்றனர். 

அதற்கு பலரும் பதிலடி கொடுக்கும் வகையில், “இளையராஜா சொந்தமாக இசையமைத்த பாடல்கள் அது. அவர் இழப்பீடு கேட்பது அவரது உரிமை” என பதிலளித்து வருகின்றனர். 

“குட் பேட் அக்லி” திரைப்படத்தில் இளையராஜா இசையமைத்து “ஒத்த ரூபா தாரேன்”, “இளமை இதோ இதோ”, “என் ஜோடி மஞ்சக்குருவி” போன்ற பாடல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.