சினிமா / TV

இசைஞானியே! இது தர்மமா? போஸ்டர் வெளியிட்டு புலம்பும் அஜித் ரசிகர்கள்! அடப்பாவமே…

5 கோடி இழப்பீடு

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இந்நாள் வரை உலகளவில் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளது. இத்திரைப்படம் முழுக்க முழுக்க அஜித் ரசிகர்களை திருப்தி படுத்தவே எடுக்கப்பட்ட திரைப்படமாக அமைந்துள்ளது. 

இத்திரைப்படத்தில் ஆங்காங்கே இடம்பெற்ற தமிழ் சினிமாவின் கிளாசிக் பாடல்கள் ரசிகர்களை துள்ளாட்டம் போட வைத்தன. அதில் இளையராஜாவின் “இளமை இதோ இதோ”, “ஒத்த ரூபா தாரேன்”, “என் ஜோடி மஞ்சக்குருவி” போன்ற பாடல்கள் அதில் இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில் தனது அனுமதியின்றி தன்னுடைய பாடல்களை பயன்படுத்தியுள்ளதாக “குட் பேட் அக்லி” திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்திடம் ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் இளையராஜா. இச்செய்தி அஜித் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

இது தர்மமா?

இந்த நிலையில் மதுரை அடங்காத அஜித் குரூப்ஸ் தனது பேஸ்புக் பக்கத்தில் “குட் பேட் அக்லி திரைப்படமாக சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நேரத்தில் 3 பாடல்களுக்கு 5 கோடி கேட்பது நியாயமா?  அவசியமா? இது தர்மமா? 

ஐயா இசைஞானியே, இருக்கும் இடத்தில் இருந்து சிந்திக்காதீர்கள், வந்த பாதையை நினைத்துப் பாருங்கள்! AK ரசிகர்களின் அன்பான வேண்டுகோள்” என்று போஸ்டர் வெளியிட்டுள்ளார்கள். இந்த போஸ்டர் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.