தமிழ் சினிமாவில் உச்சத்தில் உள்ள நடிகர் அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இரவது நடிப்பில் கடைசியாக வந்த திரைப்படம் துணிவு. தற்போது, இவர் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வரும் நிலையில், இணையத்தில் இவர் நடித்து வரும் படப்பிடிப்பு தொடர்பான வீடியோக்கள் வைரலாகி வருவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் அஜித், ஷாலினி தம்பதியின் மகனின் பள்ளியில் நடந்த விளையாட்டு போட்டிகளை இருவரும் நேரில் கண்டு ரசித்த வீடியோக்கள் வெளியாகி வைரலாகின.
இந்த நிலையில், நேற்று சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு அஜித் மற்றும் ஷாலினி செல்வது போல ஒரு வீடியோ வெளியாகி இருந்தது. இதையடுத்து, ஷாக்கான ரசிகர்கள், அவர் எதற்கு மருத்துவமனைக்கு சென்றார். அஜித்து என்ன ஆனது என பரபரப்பாக பேசப்பட்டது.
முதலில் நார்மல் செக் அப் என்று சொன்னாலும், விசாரிக்கையில் அவருக்கு மூளையில் ஒரு கட்டி இருந்ததாகவும், அதை 4 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து நீக்கியதாக இணையதளத்தில் வதந்திகள் வெளியானது.
இந்நிலையில், நடிகர் அஜித்துக்கு மூளையில் கட்டி என்பதெல்லாம் உண்மையில்லை, வழக்கமான மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட போது காதுக்கு கீழே, நரம்பு வீக்கம் இருந்தது. அரைமணி நேரத்தில், அதற்கான சிகிச்சை முடிந்து, நேற்றிரவு சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார் என்றும், அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து இன்று இரவு அல்லது நாளை வீடு திரும்புவார் என அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…
நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…
சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…
This website uses cookies.