நடிகர் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் அப்பா மகன் என இரட்டை வேடத்தில் விஜய் நடித்துள்ளார். அப்பா விஜய்க்கு ஜோடியாக நடிகை சினேகாவும், மகன் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரியும் நடித்திருக்கிறார்கள்.
இவர்களுடன் பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், சினேகா, லைலா , யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் திரைப்படம் உருவாகியுள்ளதால் படத்திற்காக யுவன் சங்கர் ராஜா ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றார்கள்.
ஏற்கனவே இந்த படத்தில் இடம்பெற்றுள்ள மூன்று பாடல்கள் வெளியான நிலையில் நான்காவது பாடலான “மட்ட” என்கிற இன்று வெளியாகவுள்ளது. இப்பாடல் மிகவும் எனெர்ஜடிகாக இருக்கும் எனவும், திரிஷா இப்பாடலில் இடம் பெற்றுள்ளார் எனவும் தகவல் வெளியானது இதனால் ரசிகர்கள் மிகுந்த மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கும் நேரத்தில் தற்போது இன்னொரு ஸ்வாரஸ்யமான தகவல் ஒன்று கிடைத்திருக்கிறது.
அதாவது இயக்குனர் வெங்கட் பிரபு கோட் படத்தை பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போது கோட் படத்தில் அஜித் கேமியோ ரோல் செய்கிறார் என்ற ஒரு செய்தி சமூக வலைதளங்களில் வெளியாகியது. இது உண்மையா? என கேள்வி கேட்டதற்கு… நான் அஜித்துடன் படம் எடுத்துவிட்டு விஜய்யை சந்திப்பதும் விஜய் படத்தை எடுத்து விட்டு அஜித்தை சந்திப்பதும் எனக்கு ஒரு சாதாரணமான எளிதான விஷயம் ஆகிடுச்சு.
அதை நிறைய பேரு பாராட்டியிருக்காங்க. அவரது ரசிகர்களும் என திட்டவே இல்ல. கோட் படத்துல நடிகர் அஜித்தின் ஒரு மொமெண்ட் இருக்கிறது. ஆனால் அது குரலா அல்லது காட்சியா அப்படிங்கிறத நான் இப்போது சொல்ல மாட்டேன். நிச்சயம் அஜித் சம்பந்தப்பட்ட தருணம் இருக்குது அதை மட்டும் நான் உறுதியாக சொல்லுவேன் என்று வெங்கட் பிரபு கூறியுள்ளார். இது விஜய் மற்றும் அஜித் ரசிகர்களை உச்சகட்ட மகிழ்ச்சியில் கொண்டாட வைத்திருக்கிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.