அஜித்தின் சினிமா வாழ்க்கையில் மிக முக்கிய படங்களில் ஒன்றாக இருந்த திரைப்படம் தான் தீனா. 2001 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தை ஏ ஆர் முருகதாஸ் எழுதி இயக்கி இருந்தார். இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க படத்தை ஜெயபிரசாந்த் என்பவர் தயாரித்திருந்தார்.
இந்த திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்று அஜித்தின் கெரியரிலே மிக முக்கிய படமாக பார்க்கப்பட்டது. திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை லைலா நடித்திருந்தார். இவர்களுடன் சுரேஷ் கோபி, நக்மா உள்ளிட்டோர் நடித்திருப்பார்கள்.
இந்த திரைப்படத்தை இயக்கியதன் மூலமாகத்தான் ஏ ஆர் முருகதாஸ் தமிழ் சினிமாவில் இயக்குனராகவே அறிமுகமானார். முதல் படமே அவருக்கு மாபெரும் வெற்றி திரைப்படமாக அமைந்தது. இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற அத்தனை பாடல்களும் ரசிகர்களின் ஃபேவரைட் லிஸ்டில் இடத்தை பிடித்தது.
இந்த திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 23 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் சமீபத்தில் கூட இப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு கிட்டத்தட்ட 4 மணி நேரத்தில் மொத்த டிக்கெட்டும் விற்று காலி ஆகிவிட்டது. அந்த அளவுக்கு இன்று வரை இந்த திரைப்படத்திற்கான மவுஸ் குறையவே இல்லை.
இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் இப்படத்தில் முதலில் நடிக்க இருந்த ஹீரோ அஜித் இல்லையாம் நடிகர் பிரஷாந்த் தானாம். ஆம் இந்த படத்தின் கதையை இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் முதல் முதலில் பிரசாந்திடம் சென்று தான் கூறியிருக்கிறார்.
அப்போது பிரசாந்தின் தந்தையான தியாகராஜன்… பிரசாந்த் இப்போது தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். கால்ஷீட் கொடுப்பதற்கு நாட்கள் இல்லை எனவே கொஞ்சம் வெயிட் பண்ணுங்க என்று சொன்னேன் .
ஆனால்.. அவர் உடனே படம் எடுக்க வேண்டும் என்று கூறி கூறினார். அதனால் அந்த படம் மிஸ் ஆகிவிட்டது என தியாகராஜன் அந்த பேட்டியில் கூறியிருந்தார். ஒருவேளை பிரசாந்த் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தால் அவரது மார்க்கெட் சரிந்து போகாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கும் என கூறி வருகிறார்கள்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.