தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் குமார், தன்னுடைய கனவு கார் பந்தயத்திற்கு 15 ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பியுள்ளார். இதற்காக அவர் தனது சினிமா தொடர்பான வேலைகளை ஒதுக்கி, முழுமையான ஈடுபாட்டுடன் பந்தயத்தில் குதித்துள்ளார்.
சமீபத்தில் வெளிவந்த ஒரு வீடியோவில், தனது Ajith Kumar Racing நிறுவனத்தின் ஸ்போர்ட்ஸ் காரை சவாரி செய்து, பந்தயத்திற்கு தயாராகியதை வெளிப்படுத்தினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி, ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.
அஜித் வெறும் பங்கேற்பாளராக மட்டுமல்லாமல், தனது பந்தய நிறுவனத்தின் உரிமையாளராகவும் இருக்கிறார். சமீபத்தில் அவர் தனது ரேஸிங் குழுவின் பட்டியலை வெளியிட்டார். குறிப்பாக, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் லோகோவை தனது கார் மீது பிரதிஷ்டை செய்ததின் மூலம் மாநிலத்தின் பெருமையை எடுத்துக்காட்டியுள்ளார்.
இதையும் படியுங்க: சொர்க்கவாசல் என்னுடைய கதை…வீடியோ வெளியிட்டு புலம்பும் உதவி இயக்குனர்…!
இந்நிலையில், அவரது கார் முன்பகுதியில் அழகான டெய்சி மலர் வரைபடம் ஒட்டி, அதற்கு முத்தமிட்டு கார் மீதான காதலை வெளிப்படுத்திய புகைப்படம் வைரலாகி வருகிறது.
அஜித் பயன்படுத்திய டெய்சி மலர் ஒரு பிரத்யேகமான பூவாக கருதப்படுகிறது.
இந்த மலர், மகத்தான தருணங்களை கொண்டாடும் பூவாக கருதப்படுகிறது. அஜித் இதனை தன்னுடைய கார் மீது பதித்திருப்பது அவரது வாழ்க்கையில் புதிய மைல்கல்லை அடையாளப்படுத்துகிறது என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த புதுமையான அணுகுமுறையால், ரசிகர்கள் தங்களது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள். “ஒரு நடிகராக மட்டுமல்லாமல், தன்னுடைய வாழ்க்கைநோக்கில் முன்னேறுகிற அஜித்தின் முயற்சி எங்களுக்கு அடையாளமாக இருக்கிறது,” என அவரை போற்றுகின்றனர்.
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
Upcoming Hero சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது கெரியரை தொடங்கியவர்தான் ரியோ. அந்த சமயத்திலேயே மிகப் பிரபலமான தொகுப்பாளராகவும்…
This website uses cookies.