மார்க் ஆண்டனி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் சமீபத்தில் அஜித் குமார் கமிட்டாகி இருந்தார். விடாமுயற்சி படத்தைத் தாண்டி குட் பேட் அக்லி படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. சமீபத்தில் படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி வைரலானது. இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் யார் யார் என தெரிந்து கொள்ளும் ஆர்வம் ரசிகர்களிடையே தொற்றியுள்ளது. இந்நிலையில், குட் பேட் அக்லி படத்தைக் குறித்து புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க: சமந்தா ஓரமா போயி உட்காருமா… புஷ்பா பாடலுக்கு ஆட்டம் போடும் நடிகை மீனா– Video..!
படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரில் அஜித் மூன்று முக பாவனையை கொடுத்தபடியுள்ளார். ஒன்று சாந்தமாகவும், ஒன்று சிரித்துக்கொண்டும் மற்றொன்று கோவமாக முக பாவனையில் காணப்படுகிறார். மேஜையில் துப்பாக்கிகள் இடம் பெற்றுள்ளன. இந்த போஸ்டர் தற்பொழுது ரசிகர்களுக்கு விருந்து அளிக்கும் வகையில் இருக்கிறது. தற்பொழுது சமூக வலைத்தலங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க: நான் ஒன்னும் இல்லாமல் வந்தவள் இல்லை.. கடுப்பான ரெடின் கிங்ஸ்லி மனைவி..!
படத்தை புஷா திரைப்படத்தை தயாரித்த மைத்த்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கின்றனர் மற்றும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளார். அதன்படி ஐதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வரும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜூன் 6 ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குட் பேட் அக்லி படம் 2025 ஆம் ஆண்டு பொங்கல் விருந்தாக வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
மேலும் படிக்க: இது தாறு மாறான கார்.. புதிய காரை வாங்கிய கையோடு Vijay Tv சீரியல் நடிகை வெளியிட்ட வீடியோ..!
அஜித் ரசிகர்கள் இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை பார்த்து கொண்டாடி வரும் நிலையில், அஜித் நடுவிரலை காட்டுவது போல் போஸ்டரில் இருக்க பலரும் அஜித் இப்ப உங்க கொள்கை எங்க போச்சு என்று கோபமாக கேள்வி எழுப்பி வருகின்றனர். அதாவது, அஜித் இளைஞர்களை கெடுக்கும்படி இனி சிகரெட் கூட பிடிக்க மாட்டேன் படத்தில் என்று கூறியிருந்தார். ஆனால், தற்போது இப்படி ஒரு பர்ஸ்ட் லுக் வெளியாகி எல்லோருக்கும் ஷாக் கொடுத்துள்ளது. அதனால், பல்வேறு விமர்சனங்களும் எழுந்து வருகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் படுமோசமான கதாபாத்திரத்தில் அக்லியாக அஜித் நடிக்கப் போகிறாரா என்று கேள்விகளும் தற்போது எழுப்பப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க: புகைப்படத்தில் இருக்கும் டாப் பிரபலம் யாருனு கண்டுபிடிங்க.. இந்த இயக்குனர் பயங்கரமான ஆள் ஆச்சே..!
இந்நிலையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ராஜகுமாரன் நடிகர் அஜித் குறித்து பேசியுள்ளார். அதில், ஒரு படத்தின் ஷூட்டிங்கில் அஜித் ஒரு ஷார்ட் முடிந்ததும் ஹீராவுடன் சேர்ந்து கட்டிபிடித்து இருப்பார். அதன் பின்பு மீண்டும் ஷார்ட் ரெடி என்று சொன்னால், உடனே வருவார். கொஞ்சம் கூட கூச்சப்பட மாட்டார். ஷூட்டிங்கில், எல்லோரும் இருப்பார்கள். அதை எல்லாம் கண்டுக்கவே மாட்டார். இந்த மாதிரி எல்லாம் ஷூட்டிங் ஸ்பாட்டில் யாரும் செய்ய மாட்டாங்க. ஆனால், அஜித் என்ன பண்றமோ அதை 100% கொடுப்பார் என்று இயக்குனர் ராஜகுமாரன் அஜித் குறித்து பெருமையாக பேசி உள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.