அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில் அஜித்குமாரின் அடுத்த படத்தை இயக்குவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அஜித்குமார் தற்போது வெளிநாடுகளில் கார் பந்தயங்களில் கலந்துகொள்ளும் ஆர்வத்தில் இருக்கிறார். அக்டோபர் மாதத்திற்குப் பிறகுதான் அவர் திரைப்படங்களில் நடிப்பது குறித்தான முடிவுகளை எடுப்பார் என கூறப்படுகிறது.
அஜித்தின் அடுத்த திரைப்படத்தை தனுஷ் இயக்கவுள்ளதாக ஒரு தகவல் வெளியாக அது பரபரப்பாக பேசப்பட்டது. அதனை தொடர்ந்து அஜித்தின் அடுத்த படத்தை சிறுத்தை சிவா இயக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் சினிமா சார்ந்த ஒரு வாட்ஸ் ஆப் குழுவில் பத்திரிக்கையாளர் ஒருவர் அஜித்தின் அடுத்த திரைப்படத்தை “புஷ்பா” இயக்குனர் சுகுமார் இயக்கவுள்ளதாக ஒரு செய்தியை பகிர்ந்தாராம். அந்த குழுவில் அஜித்தின் மேனேஜரான சுரேஷ் சந்திராவும் இருந்தாராம்.
அப்பத்திரிக்கையாளர் அந்த தகவலை பகிர்ந்ததும் சுரேஷ் சந்திரா, “இல்லை, இப்படி ஒரு செய்தி அடிப்படையற்றது. இதில் உண்மை இல்லை” என அந்த செய்தியை மறுத்துள்ளாராம். “சுரேஷ் சந்திரா பதறுவதை பார்த்தால் ஒரு வேளை இந்த செய்தி உண்மையாக இருக்குமோ?” என்று பத்திரிக்கையாளர் பிஸ்மி கேள்வி எழுப்பியுள்ளார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.