அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில் அஜித்குமாரின் அடுத்த படத்தை இயக்குவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அஜித்குமார் தற்போது வெளிநாடுகளில் கார் பந்தயங்களில் கலந்துகொள்ளும் ஆர்வத்தில் இருக்கிறார். அக்டோபர் மாதத்திற்குப் பிறகுதான் அவர் திரைப்படங்களில் நடிப்பது குறித்தான முடிவுகளை எடுப்பார் என கூறப்படுகிறது.
அஜித்தின் அடுத்த திரைப்படத்தை தனுஷ் இயக்கவுள்ளதாக ஒரு தகவல் வெளியாக அது பரபரப்பாக பேசப்பட்டது. அதனை தொடர்ந்து அஜித்தின் அடுத்த படத்தை சிறுத்தை சிவா இயக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் சினிமா சார்ந்த ஒரு வாட்ஸ் ஆப் குழுவில் பத்திரிக்கையாளர் ஒருவர் அஜித்தின் அடுத்த திரைப்படத்தை “புஷ்பா” இயக்குனர் சுகுமார் இயக்கவுள்ளதாக ஒரு செய்தியை பகிர்ந்தாராம். அந்த குழுவில் அஜித்தின் மேனேஜரான சுரேஷ் சந்திராவும் இருந்தாராம்.
அப்பத்திரிக்கையாளர் அந்த தகவலை பகிர்ந்ததும் சுரேஷ் சந்திரா, “இல்லை, இப்படி ஒரு செய்தி அடிப்படையற்றது. இதில் உண்மை இல்லை” என அந்த செய்தியை மறுத்துள்ளாராம். “சுரேஷ் சந்திரா பதறுவதை பார்த்தால் ஒரு வேளை இந்த செய்தி உண்மையாக இருக்குமோ?” என்று பத்திரிக்கையாளர் பிஸ்மி கேள்வி எழுப்பியுள்ளார்.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.