சினிமா / TV

எவர் முன்பும் பணியாத அஜித், அந்த சிலைக்கு மட்டும் பணிந்தது ஏன்? அதிர்ச்சியூட்டும் உண்மை கதை…

கார் பந்தயங்களில் சாதனை

அஜித்குமார் தனது சினிமா சம்பந்தப்பட்ட பணிகளை கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு சமீப காலமாக வெளிநாடுகளில் கார் பந்தயங்களில் பிசியாக இருக்கிறார். அஜித்தின் அணி பல கார் பந்தயங்களில் கலந்துகொண்டு சர்வதேச பரிசுகளை வென்று வருகிறது. இது அஜித் ரசிகர்களுக்கு மட்டுமல்லாது இந்தியர்களுக்கே பெருமை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது. 

அஜித்குமார் தற்போது ஐரோப்பிய நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் இத்தாலியின்  ஐமோலா சர்க்யூட் என்ற கார் பந்தய சுற்றுப்பாதையில் அமைந்துள்ள காலம் சென்ற உலக ஃபார்முலா 1 சேம்பியன் அயர்டன் சென்னாவின் சிலையின் பாதங்களுக்கு முத்தமிட்டு மரியாதை செலுத்தினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் “யாருக்கும் பணியாத அஜித், அயர்டன் சிலைக்கு முத்தமிடுகிறார் என்றால் இவர் யாராக இருக்கும்” என்ற ஆவல் ரசிகர்களின் மத்தியில் எழுந்துள்ளது.

யார் இந்த அயர்டன் சென்னா?

உலக கார் சாம்பியனாக பலராலும் போற்றப்பட்ட அயர்டன் சென்னா, பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர். இவர் தனது 13 ஆவது வயதிலிருந்தே கார் ரேஸிங்கில் ஈடுபாடுகொண்டிருந்தவர். 1984 முதல் 1994 வரை மூன்று ஃபார்முலா ஒன் வேர்ல்ட் டிரைவர்ஸ் சாம்பியன் டைட்டிலை வென்றுள்ளார் இவர். 

அயர்டன் சென்னா 1994 ஆம் ஆண்டு இத்தாலியின் ஐமோலோ சர்க்யூட்டில் நடைபெற்ற  சான் மெரினோ கிராண்ட் பிக்ஸ் கார் பந்தய போட்டியில் பங்கேற்றபோது எதிர்பாராத விதத்தில் விபத்து ஏற்பட்டு உயிரிழந்தார். அவர் உயிரிழந்த இடத்தில்தான் அவரது நினைவு உருவச்சிலை அமைந்துள்ளது. அந்த சிலைக்குதான் அஜித்குமார் மரியாதை செலுத்தினார். கார் பந்தயங்களில் அயர்டன் சென்னார்தான் அஜித்குமாரின் இன்ஸ்பிரேஷன் என கூறப்படுகிறது.  

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.