அஜித்குமார் தனது சினிமா சம்பந்தப்பட்ட பணிகளை கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு சமீப காலமாக வெளிநாடுகளில் கார் பந்தயங்களில் பிசியாக இருக்கிறார். அஜித்தின் அணி பல கார் பந்தயங்களில் கலந்துகொண்டு சர்வதேச பரிசுகளை வென்று வருகிறது. இது அஜித் ரசிகர்களுக்கு மட்டுமல்லாது இந்தியர்களுக்கே பெருமை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.
அஜித்குமார் தற்போது ஐரோப்பிய நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் இத்தாலியின் ஐமோலா சர்க்யூட் என்ற கார் பந்தய சுற்றுப்பாதையில் அமைந்துள்ள காலம் சென்ற உலக ஃபார்முலா 1 சேம்பியன் அயர்டன் சென்னாவின் சிலையின் பாதங்களுக்கு முத்தமிட்டு மரியாதை செலுத்தினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் “யாருக்கும் பணியாத அஜித், அயர்டன் சிலைக்கு முத்தமிடுகிறார் என்றால் இவர் யாராக இருக்கும்” என்ற ஆவல் ரசிகர்களின் மத்தியில் எழுந்துள்ளது.
உலக கார் சாம்பியனாக பலராலும் போற்றப்பட்ட அயர்டன் சென்னா, பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர். இவர் தனது 13 ஆவது வயதிலிருந்தே கார் ரேஸிங்கில் ஈடுபாடுகொண்டிருந்தவர். 1984 முதல் 1994 வரை மூன்று ஃபார்முலா ஒன் வேர்ல்ட் டிரைவர்ஸ் சாம்பியன் டைட்டிலை வென்றுள்ளார் இவர்.
அயர்டன் சென்னா 1994 ஆம் ஆண்டு இத்தாலியின் ஐமோலோ சர்க்யூட்டில் நடைபெற்ற சான் மெரினோ கிராண்ட் பிக்ஸ் கார் பந்தய போட்டியில் பங்கேற்றபோது எதிர்பாராத விதத்தில் விபத்து ஏற்பட்டு உயிரிழந்தார். அவர் உயிரிழந்த இடத்தில்தான் அவரது நினைவு உருவச்சிலை அமைந்துள்ளது. அந்த சிலைக்குதான் அஜித்குமார் மரியாதை செலுத்தினார். கார் பந்தயங்களில் அயர்டன் சென்னார்தான் அஜித்குமாரின் இன்ஸ்பிரேஷன் என கூறப்படுகிறது.
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனின் தந்தையான அல்லு அரவிந்த் தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் ஆவார். இவர் தமிழில்…
டாப் நடிகை தென்னிந்தியாவின் டாப் நடிகையாக சமீப காலங்களில் வலம் வருபவர் சமந்தா. கடந்த 2022 ஆம் ஆண்டு தனக்கு…
திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஹரி ஜோதி என்பவரின் இரண்டாவது மகன் அஜய்(22). இவர் நண்பர்களுடன்…
ரேஸர் அஜித்குமார் அஜித்குமார் தற்போது உலக நாடுகள் பலவற்றில் கார் பந்தயங்களில் மிகவும் தீவிரமாக ஈடுபாடு காட்டி வருகிறார். சில…
பீனிக்ஸ் விழான்? விஜய் சேதுபதியின் மகனான சூர்யா சேதுபதி கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் “பீனிக்ஸ்”. இத்திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள…
அஜித் குமார் கொலைக்கு பிறகு தனிப்படையை அரசு கலைத்திருப்பது வரவேற்கத்தக்கது.மடப்புரத்தில் முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். இதையும் படியுங்க: திமுக…
This website uses cookies.