“குட் பேட் அக்லி” திரைப்படத்தை தொடர்ந்து அஜித்குமார் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. சமீப மாதங்களாக அஜித்குமார் பல நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். வருகிற நவம்பர் மாதம் முதல் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
“குட் பேட் அக்லி” திரைப்படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரனுடன் அஜித்குமார் மீண்டும் இணையவுள்ள திரைப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் ஐசரி கணேஷ் அந்த பிராஜெக்டில் இருந்து விலகிவிட்டாராம். அதனை தொடர்ந்து பல தயாரிப்பாளர்களிடம் அந்த பிராஜெக்ட் சென்றது. ஆனால் எவரும் தயாரிக்க முன்வரவில்லையாம்.
எந்த தயாரிப்பாளர்களும் முன்வராததற்கு அஜித்குமாரின் நிபந்தனைகள்தான் காரணம் என கூறப்பட்டது. அதாவது அஜித்குமார் ரூ.180 கோடி சம்பளம் கேட்கிறாராம். அதில் 50 சதவீதத்தை முன்பணமாக கேட்கிறாராம். மேலும் மீதி பணத்தை எதிர்கால தேதியிட்ட காசோலை (Post Dated Cheque) ஆக முன்கூட்டியே தரவேண்டும் என கூறுகிறாராம். அதே போல் இந்த மொத்த பணத்தையும் படப்பிடிப்பு நடைபெறும்போதே தந்துவிட வேண்டும் எனவும் நிபந்தனை போடுகிறாராம். இதனால் எந்த தயாரிப்பாளர்களும் முன் வரவில்லை என கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாது அஜித்குமார் துபாயில் ஒரு வங்கி கணக்கு வைத்திருக்கிறாராம். அந்த வங்கி கணக்கில்தான் அந்த பணத்தை செலுத்த வேண்டும் எனவும் நிபந்தனை போடுகிறாராம். இந்தியாவில் இருந்து வெளிநாட்டில் உள்ள வங்கி கணக்கில் பணம் செலுத்தினால் சில நடைமுறை சிக்கல்கள் ஏற்படும் என்பதாலும் தயாரிப்பாளர்கள் பின் வாங்குவதாகவும் கூறப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது. இதில்…
தி.மு.க நிர்வாகிகளை கைது செய்தால் மட்டுமே உடலை வாங்குவோம் என் உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனை பிணவறை முன்பு ஆர்ப்பாட்டத்தில்…
லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14 ஆம்…
கள்ளத்தொடர்பால் பல சம்பவங்கள் அரங்கேறி வருவது வாடிக்கையாகிவிட்டது. அது கொலை அல்லது தற்கொலையில் முடிவது அதிகரித்து வருகிறது. கடலூர் மாவட்டம்…
கதாநாயகனாக அறிமுகமாகும் சூர்யா சேதுபதி விஜய் சேதுபதியின் மகனான சூர்யா சேதுபதி கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் “பீனிக்ஸ்”. சூர்யா சேதுபதி…
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே அஞ்செட்டி அடுத்துள்ள மாவனட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவராஜ் (40).இவர் சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார்.…
This website uses cookies.