அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும் தீராத ஆசை உண்டு. அவர் சினிமாவிற்கு நடிக்க வந்ததே கார் பந்தயத்தில் கலந்துகொள்வதற்கான தொகையை சம்பாதிப்பதற்குத்தான் என்று பலரும் கூறுவது உண்டு.
அதுமட்டுமல்லாது விமான ஓட்டுநருக்கான உரிமத்தை பெற்ற தமிழ்நாட்டின் முதல் நடிகர் அஜித்தான். இது போக துப்பாக்கிச் சுடுதலில் பயிற்சிப்பெற்று அதற்கான போட்டிகளிலும் கலந்துகொண்டார். இவ்வாறு இந்திய சினிமாக்களிலேயே மிகவும் தனித்துவமான நடிகராக வலம் வருகிறார் அஜித்குமார்.
கடந்த ஜனவரி மாதம் 25 ஆம் தேதி 2025 ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பத்ம பூஷன் விருதுகளின் பட்டியலில் அஜித்குமாரின் பெயர் இடம்பெற்றிருந்தது. இவரைப் போலவே நடிகை ஷோபனாவுக்கும் பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று 2025 ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பலரும் கலந்துகொண்டனர். அந்த வகையில் நடிகர் அஜித்குமார் நாட்டின் ஜனாதிபதி திரௌபதி முர்முவின் கைகளால் பத்ம பூஷன் விருதை பெற்றுக்கொண்டார். அதே போல் முன்னணி தெலுங்கு நடிகரான பாலகிருஷ்ணாவும் பத்மபூஷன் விருதை பெற்றுக்கொண்டார்.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.