அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா விழாக்களிலும் கலந்துகொள்ளவில்லை. அவர் நடித்த திரைப்படங்களின் புரொமோஷன்களுக்கு கூட அவர் வந்ததில்லை. இந்த நிலையில்தான் சமீபத்தில் ஒரு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார் நடிகர் அஜித்குமார்.
மிக நீண்ட பேட்டியான அதில் அஜித்குமார் தனது வாழ்க்கை அனுபவங்கள் குறித்தும் சினிமா கெரியர் குறித்தும் பல விஷயங்களை பேசியுள்ளார். இந்த நிலையில் அப்பேட்டியில் அவர், “நான் ஓய்வு பெற வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். நான் எல்லாவற்றையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. மக்கள் தங்கள் வாழ்க்கையை பற்றி குறைகூறுகிறார்கள். காலை எழுந்து உயிருடன் இருப்பதே பெரிய வரம்தான்” என கூறியுள்ளார்.
மேலும் பேசிய அஜித், “எனக்கு அறுவை சிகிச்சைகள் பல நடந்துள்ளன. புற்றுநோயில் இருந்து குணமடைந்த நண்பர்கள் பலர் எனக்கு இருக்கின்றனர். வாழ்க்கை எவ்வளவு மதிப்புமிக்கது என்பதை நாம் அறிவோம். இந்த வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியையும் நான் பயன்படுத்த விரும்புகிறேன்” எனவும் அப்பேட்டியில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.