‘விடாமுயற்சி’ அஜர்பைஜான் ஷெட்யூல் நிறைவு.. வைரலாகும் வீடியோ..!

மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் அஜித் நடித்து வருகிறார். இப்படத்தில், அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். அஜித்தின் 62வது ஆக்சன் படமாக இது உருவாகி வருகிறது. அதில், வில்லனாக ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் ஆரவ் நடிக்கின்றனர். இவர்களுடன் நடிகைகள் ரெஜினா கசாண்ட்ரா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டவர்கள் படத்தில் நடித்து வருகின்றனர்.

பல்வேறு இடங்களில் இதன் படப்பிடிப்பு நடந்து வந்தது. சிறிது இடைவெளிக்கு பின்னர் நடிகர் அஜித்குமாரின் விடாமுயற்சி படபிடிப்பு தொடங்கியது. படத்தின் சண்டைக் காட்சிகள் படமாக்கப்படும் வீடியோவை பகிர்ந்து அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ்சந்திரா அவப்பொழுது, அப்டேட் கொடுத்து வந்தார்.

சமீபத்தில், படத்தின் பர்ஸ்ட் லுக் பட குழுவினர் வெளியிட்டனர். அதை தொடர்ந்து, இரண்டு போஸ்டர்களை வெளியிட்டனர். சமீபத்தில், த்ரிஷா மற்றும் அஜித் இணைந்து இருவரும் ஒரு விண்டேஜ் லுக் போஸ்ட்ரை பட குழு வெளியிட்டு இருந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக அஜர்பைஜானில் நடந்து வந்த படப்பிடிப்பு பணிகள் நேற்றுடன் முடிவடைந்துள்ளது.

இது குறித்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டனர். அதில், பட குழு ஒன்றாக இருந்த குரூப் போட்டோவை பதிவிட்டுள்ளனர். அவ்வபோது, படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வெளியாகும். ஆனால், அதில் எதிலும் இயக்குனர் மகிழ்திருமேனி அஜித் உடன் காணப்படவில்லை. தற்போது, வெளியிட்ட புகைப்படத்தில் அஜித்தின் பக்கத்தில் இயக்குனர் மகிழ்திருமேனி காணப்படுகிறார். அடுத்த படப்பிடிப்பு பணி ஹைதராபாத்தில் எட்டு நாட்கள் நடைபெற உள்ளது. இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வைரலாகி வருகிறது.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.