தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ஒரு படத்தில் ஒரு நடிகர் செட்டாவார் இவர் செட்டாக மாட்டார் என்று படத்தின் ஆரம்பத்தில் இருந்தே தெரியவந்துவிடும். அப்படி நடிகர் அஜித்குமார் 10 நாட்களில் படத்தில் நடித்து அதன் பின் தயாரிப்பாளர் கொடுத்த அழுத்தத்தால் படத்தில் இருந்து விலகிய சம்பவம் நடந்துள்ளது.
பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்குவதை தாண்டி மெட்ராஸ் டாக்கீஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்தார். முதலில் தன் படத்தினை தயாரித்து வந்த மணிரத்தினம் வளர்ந்து வரும் இயக்குனர்களுக்காக படத்தினை தயாரிக்க ஆரம்பித்தார்.
மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தில் தயாரிக்கும் படங்களின் கதை கதாபாத்திரம் டப்பிங் உள்ளிட்ட பல விதங்களில் மணிரத்தினம் மனைவி சுகாசினியின் பங்கும் இருந்து வந்தது. அந்த சமயத்தில் வசந்த் இயக்கத்தில் சூர்யா விஜய் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் நேருக்கு நேர். தமிழ் சினிமாவிற்கு நேருக்கு நேர் படத்தின் மூலம் நடிகர் சூர்யா அறிமுகமானார்.
நேருக்கு நேர் படத்தில் சூர்யா நடித்திருந்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் கமிட்டானவர் அஜித் தான். சில நாட்கள் நேருக்கு நேர் படத்தில் நடித்த அவர் கதையில் தன்னுடைய கதாபாத்திரம் வலுவாக இல்லாத காரணத்தினால் படத்திலிருந்து வெளியேறிவிட்டதாக கூறப்பட்டது.
அதுவும் கமிட்டாகி 10 நாட்களில் அஜித் அந்த படத்தில் இருந்து வெளியேறி விட்டார். அதற்கு காரணம் அஜித்திற்கும் இயக்குனர் வசத்திற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட இது மணிரத்தினம் சுகாசினியின் காதிற்கு சென்றது.
உடனே மணிரத்தினம் சுகாசினி இயக்குனர் வசந்திடம் அஜித்தை படத்திலிருந்து தூக்கி விடலாம் என்று பிளான் போட்டு இருக்கிறார். தயாரிப்பாளர்கள் என்பதால் அதற்கு வசந்தும் ஓகே சொல்லி இருக்கிறார். அதன் பின் அஜித் ரோலுக்கு பிரசாந்த் பிரபுதேவாவை கேட்க தனிப்பட்ட காரணத்தினால் அவர்கள் இருவரும் நடிக்க மறுத்துவிட்டனர்.
அதன் பின்னர் சூர்யாவிடம் கேட்க முதலில் சிவக்குமார் வேண்டாம் எனக் கூறி அதன்பின் மணிரத்தினம் கூறியதால் ஓகே சொல்லி நடிக்க வைத்திருக்கிறார். சூர்யா அறிமுக நடிகர் என்பதால் நடித்துக் கொடுத்திருக்கிறார்.
படுதோல்வியடைந்த சிக்கந்தர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் கடந்த மார்ச் மாதம் வெளியான “சிக்கந்தர்”…
காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான நவமணி வயது 31 என்பவர் அதே பகுதியில் ஒன்பதாம்…
மாறன் குடும்பத்தில் ஏற்பட்ட புகைச்சல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சன் டிவி பங்கு தொடர்பாக கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன்…
வெளியானது குபேரா தனுஷ் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் “குபேரா”. இத்திரைப்படத்தில் தனுஷுடன் நாகர்ஜுனா,…
சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா…
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
This website uses cookies.