அஜித்தின் சினிமா வாழ்க்கையில் மிக முக்கிய டர்னிங் பாயிண்டாக அமைந்து மாபெரும் வெற்றி திரைப்படமாக பார்க்கப்பட்டது “மங்காத்தா”. இந்த திரைப்படம் வில்லத்தனம் ,பின்னணி இசை, சண்டை காட்சிகள் என ஒட்டு மொத்தமே படத்தில் அதிரடியாக இருந்தது.
இதனால் மங்காத்தா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று பட்டித்தொட்டி எங்கும் பேசப்பட்டது. அப்படி ஒரு நிலையில் வெளியான இந்த திரைப்படம் அஜித் ரசிகர்களை கொண்டாட்ட வைத்தது. குறிப்பாக அஜித்தின் மேனரிசம் இந்த திரைப்படத்தில் காட்சிக்கு காட்சி ரசிகர்களை தியேட்டரில் விசில் அடித்துக் கொண்டாட வைத்தது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜாவின் இசையமைப்பில் சன் பிக்சர் நிறுவனம் தயாரிப்பில் வெளிவந்த இந்த திரைப்படத்தில் அஜித், திரிஷா, அஞ்சலி, ஆண்ட்ரியா, ராய் லட்சுமி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தார்கள். அஜித்துடன் சேர்ந்து ஆக்சன் கிங் அர்ஜுன், வைபவ் , பிரேம் ஜி அமரன், ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பல நட்சத்திர பிரபலமே இதில் நடித்திருந்தார்கள் .
இந்த திரைப்படம் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்து பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரி குவித்தது. மங்காத்தா படத்தின் பின்னணி இசை இன்றைக்கும் தமிழ் சினிமாவின் மகுடத்தின் மாணிக்கமாகவே பார்க்கப்பட்டு வருகிறது. கடந்த 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளிவந்த இந்த திரைப்படம் அஜித்தின் 50 ஆவது திரைப்படமாக வெளியாகியது.
இந்நிலையில் இந்த படம் வெளியாகி 13 ஆண்டுகள் ஆனதை ரசிகர்கள் நேற்று இணையதளங்கள் முழுக்க ட்ரெண்ட் செய்து கொண்டாடினார்கள். இந்த நேரத்தில் அஜித் இப்படத்திற்காக வாங்கிய சம்பள விவரம் குறித்த தற்போதைய தகவல் வெளியாகி வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்திற்காக அஜித் ரூ.10 கோடி சம்பளமாக வாங்கினாராம்.
இந்த படத்தில் தான் அஜித் டபுள் டிஜிட்டில் சம்பளம் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. மங்காத்தா திரைப்படம் ரூ . 24 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு கிட்டத்தட்ட ரூ. 68 கோடி முதல் ரூ. 100 கோடி வரை வசூல் ஈட்டி மாபெரும் சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது .
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.