தமிழ் சினிமாவில் உச்சத்தில் உள்ள அஜித்துடன் நடிக்க பல நடிகைகள் போட்டா போட்டி போட்டு வருகின்றனர், அதே போல அவரை வைத்த இயக்கவும், படத்தை தயாரிக்கவும் பல பிரபலங்கள் காத்து வருகின்றனர்.
எந்த பிரச்சனைக்கு செல்லாத அஜித், தான் உண்டு தன் வேலையுண்டு என இருப்பவர், திரைமறைவில் பலருக்கும் உதவி செய்து வருகின்றார்.
ஆரம்பத்தில் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட நடிகர் அஜித் தற்போது ரசிகர்களின் நலன் கருதி பொது நிகழ்ச்சிகளை புறக்கணித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் அஜித் குறித்து பிரபல தயாரிப்பாளரான கலைப்புலி எஸ் தாணு தெரிவித்திருக்கும் கருத்து ஒன்று அவரது ரசிகர்களை பிரமிக்க வைத்துள்ளது.
அதாவது தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவின் மனைவி சிங்கப்பூரில் மரணமடைந்ததால் அவருடைய உடலை சென்னைக்கு கொண்டு வர ரொம்பவே தாமதமானதாம்.
அந்த நேரத்தில் நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் தயாரிப்பாளர் தாணு வீட்டு வாசலில் இரண்டறை மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தாராம். இதனை உருக்கமாக கூறியிருக்கிறார் கலைப்புலி தாணு.
இதனைக் கேட்ட ரசிகர்கள், அஜித்தை கொண்டாடி வருகிறார்கள். நடிகர் அஜித் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் நடித்தார்.
அதன்பிறகு அவர்கள் இருவரும் இணைந்து பணியாற்ற வில்லை. இந்நிலையில் நடிகர் அஜித் தற்போது லைகா புரடெக்ஷன் தயாரிப்பில் ஏகே 62 படத்தில் நடிக்க உள்ளார். அதனை முடித்துவிட்டு மீண்டும் பைக்கில் உலகம் சுற்றும் பயணத்தை தொடங்க உள்ளார் அஜித் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.