பாலா இயக்கிய “நான் கடவுள்” திரைப்படத்தில் முதலில் நடித்தது அஜித்குமார்தான். இந்த தகவல் சினிமா ரசிகர்கள் பலரும் அறிந்த விஷயமே. படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களில் இருவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டதால் அஜித் இத்திரைப்படத்தில் இருந்து விலகினார் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாது அஜித்தை பாலா தனியாக ஒரு அறைக்கு அழைத்துச் சென்று அடித்ததாகவும் கிசுகிசுக்கப்படுகின்றது. ஆனால் அது உண்மையல்ல, வதந்தி என்று பலரும் அடித்து கூறுகின்றனர்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட ஒளிப்பதிவாளர் ரத்னவேலு பலரும் அறியாத ஒரு தகவலை அப்பேட்டியில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
“நந்தா படத்தில் முதலில் அஜித்தான் ஹீரோவாக இருந்தார். பாலா அஜித்திடம் கதை சொன்னபோது நான் பாலாவுடன்தான் அமர்ந்திருந்தேன். அக்காலகட்டத்தில் நானும் பாலாவும் நெருங்கிய நண்பர்களாக இருந்தோம். பாலா அத்திரைப்படத்தின் ஒன் லைனை மட்டும்தான் கூறினார். அதை கேட்டு அஜித் Impress ஆகிவிட்டார்.
அதன் பின் கதை மற்றும் திரைக்கதை விவாதத்தில் அவர்கள் இருவருக்கும் இடையே நடந்த கருத்து வேறுபாட்டில் அத்திரைப்படம் நடக்கவில்லை” என்று அப்பேட்டியில் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு பகிர்ந்துகொண்டார்.
2001 ஆம் ஆண்டு வெளிவந்த “நந்தா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் திருப்புமுனை வாய்ந்த திரைப்படமாக அமைந்தது. இப்போதும் இத்திரைப்படம் ரசிகர்களால் ரசித்து பார்க்கக்கூடிய திரைப்படமாக அமைந்துள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.