பாலா இயக்கிய “நான் கடவுள்” திரைப்படத்தில் முதலில் நடித்தது அஜித்குமார்தான். இந்த தகவல் சினிமா ரசிகர்கள் பலரும் அறிந்த விஷயமே. படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களில் இருவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டதால் அஜித் இத்திரைப்படத்தில் இருந்து விலகினார் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாது அஜித்தை பாலா தனியாக ஒரு அறைக்கு அழைத்துச் சென்று அடித்ததாகவும் கிசுகிசுக்கப்படுகின்றது. ஆனால் அது உண்மையல்ல, வதந்தி என்று பலரும் அடித்து கூறுகின்றனர்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட ஒளிப்பதிவாளர் ரத்னவேலு பலரும் அறியாத ஒரு தகவலை அப்பேட்டியில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
“நந்தா படத்தில் முதலில் அஜித்தான் ஹீரோவாக இருந்தார். பாலா அஜித்திடம் கதை சொன்னபோது நான் பாலாவுடன்தான் அமர்ந்திருந்தேன். அக்காலகட்டத்தில் நானும் பாலாவும் நெருங்கிய நண்பர்களாக இருந்தோம். பாலா அத்திரைப்படத்தின் ஒன் லைனை மட்டும்தான் கூறினார். அதை கேட்டு அஜித் Impress ஆகிவிட்டார்.
அதன் பின் கதை மற்றும் திரைக்கதை விவாதத்தில் அவர்கள் இருவருக்கும் இடையே நடந்த கருத்து வேறுபாட்டில் அத்திரைப்படம் நடக்கவில்லை” என்று அப்பேட்டியில் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு பகிர்ந்துகொண்டார்.
2001 ஆம் ஆண்டு வெளிவந்த “நந்தா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் திருப்புமுனை வாய்ந்த திரைப்படமாக அமைந்தது. இப்போதும் இத்திரைப்படம் ரசிகர்களால் ரசித்து பார்க்கக்கூடிய திரைப்படமாக அமைந்துள்ளது.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.