அஜித்குமாரின் விடாமுயற்சி திரைப்படம் தொடர்ந்து நேர்மறையான விமர்சனங்களையே Twitter Review-இல் பெற்று வருகிறது.
சென்னை: கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அஜித்குமாரின் திரைப்படம், இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட சில வெளிநாடுகளில் நேற்று இரவே படம் வெளியானது. அதேபோல், கேரளா உள்பட சில மாநிலங்களில் இன்று அதிகாலையே படம் வெளியாகியது.
அதேநேரம், தமிழ்நாட்டில் முதல் காட்சிக்கு இப்போதுதான் ரசிகர்கள் படையெடுத்துள்ளனர். அதிலும், சில பகுதிகளில் விடாமுயற்சி வெளியாகி ரசிகர்களின் பேராதரவினைப் பெற்று வருகிறது. இந்த நிலையில், படம் பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றன.
அதில், ராஜ் என்ற பெயர் கொண்ட எக்ஸ் தள பயனர், “சலிப்பை உண்டாக்கும் காட்சிகள் இல்லை, படத்தொகுப்பு கச்சிதமாக உள்ளது, ஒளிப்பதிவு, படத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது, நடிப்பை பற்றி சொல்லவே வேண்டாம், மொத்தத்தில் விடாமுயற்சி முதல் பகுதி அருமையாக இருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நிஷாந்த் ராஜராஜன் என்ற எக்ஸ் தளப் பயனர், “காட் மோடில் (God Mode) அஜித்குமார் நடித்துள்ளார். படத்தின் சுவாரஸ்யத்தை ஒவ்வொரு இடத்திலும் அவர் கட்டமைக்கிறார், திரையில் அவர் ஒரு ராஜா தான், வழக்கமான பூமர் வசனங்களுக்கு அஜித்குமாரின் பதில் தெறிக்கவிடுகிறது, சத்தியமாக, ஒளிப்பதிவு ஹாலிவுட்டைத் தாண்டி உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
அதேபோல், இப்படம் பிரேக்டவுன் (Breakdown) என்ற படத்தின் ரீமேக் என்றும், அதில் பிளாஷ்பேக் காட்சிகள் மட்டுமே இணைத்துள்ளதாகவும் சிலர் பேட்டிகள் வாயிலாக கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக, படத்தின் ஒளிப்பதிவை பெரும்பாலானோர் பாராட்டுகின்றனர்.
இதையும் படிங்க: நீங்க படத்த பாருங்க.. நான் ரேஸ பாக்குறேன்.. அஜித்தின் வீடியோ வைரல்!
இதனிடையே, கிறிஸ்டோபர் கனகராஜ் என்ற எக்ஸ் தளப் பயனர், “அஜித்குமார் திரையில் நன்றாக ஜொலித்துள்ளார். அஜித் – த்ரிஷா காட்சிகள் மந்தமாக இருக்கின்றன, அர்ஜுன் மற்றும் ரெஜினா போதுமானது, இசையும் சரியானது, பாடல்கள் நன்றாக உள்ளது, அஜர்பைஜான் காட்சிகள் சிறப்பாக இருக்கிறது.
பலவீனமான கதை, உணர்ச்சிகள் இல்லை, ட்விஸ்ட்கள் இல்லை, கதை சொல்லும் விதம் தொய்வாக இருக்கிறது, ஸ்டைலான களத்தினுள்ளே பொருள் இல்லை, முழுவதுமாக ஏமாற்றமாக இருக்கிறது” எனக் கூறியுள்ளார். இதற்கு, ‘விடாமுயற்சி – வீண்முயற்சி’ எனக் கூறிக்கொண்டு கிறிஸ்டோபர் வருவான் என மீம்ஸ்கள் வந்ததை அவரும் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…
சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…
“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர்…
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
This website uses cookies.