சினிமா / TV

அஜித் 64 திரைப்படம் டிராப்? அதிர்ச்சியை கிளப்பிய பிரபலம்! இப்படி ஒரு பிரச்சனையா வரணும்?

மீண்டும் இணையும் GBU கூட்டணி

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தாலும் பாக்ஸ் ஆஃபீஸில் ஓரளவு நல்ல வசூலையே பெற்றது. இந்த நிலையில் அஜித்குமாரின் 64 ஆவது திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரனே இயக்கவுள்ளார். இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.  

அஜித்குமார் தற்போது கார் ரேஸில் ஈடுபாடு காட்டி வருகிறார். அந்த வகையில் நவம்பர் மாதம் முதல் தனது 64 ஆவது திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவித்தன. இந்த நிலையில்தான் அஜித்குமாரின் 64 ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு பங்கம் ஏற்பட்டுள்ளதாக பிரபல மூத்த பத்திரிக்கையாளர் அந்தணன் தெரிவித்துள்ளார்.

AK 64 டிராப்?

அதாவது அஜித்குமாரின் 64 ஆவது திரைப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பதாக முடிவாகியிருந்ததாம். இத்திரைப்படத்தின் சேட்டலைட், டிஜிட்டல் உரிமங்களை முதலிலேயே விற்றுவிட்டு அந்த பணத்தில் படப்பிடிப்பை தொடங்கலாம் என ராகுல் நினைத்தாராம். 

ஆனால் அஜித்குமாரோ சம்பளத்திற்கு பதிலாக டிஜிட்டல், சேட்டலைட் உரிமங்களை விற்கும் உரிமையை தனக்கு கொடுத்து விடுமாறு ராகுலிடம் கேட்டுள்ளாராம். ஆதலால் அஜித்குமாரின் 64 ஆவது திரைப்படத்தை எப்படி தொடங்குவது என ராகுல் முழித்துக்கொண்டிருக்கிறாராம். இதன் காரணமாக இத்திரைப்படம் டிராப் ஆக வாய்ப்புகள் உள்ளதாக கூறுகிறார்களாம். இவ்வாறு ஒரு தகவலை அந்தணன் பகிர்ந்துகொண்டுள்ளார். இச்செய்தி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.