சினிமா / TV

ஆலியா பட்டிடம் பல லட்ச ரூபாய் ஆட்டையை போட்ட உதவியாளர்? வளைத்து பிடித்த போலீஸார்!

பாலிவுட் நடிகை ஆலியா பட்டிடம் பல லட்ச ரூபாய் பண மோசடி செய்த முன்னாள் உதவியாளரை போலீஸார் கைது செய்துள்ளனர்

மோசடி செய்த முன்னாள் உதவியாளர்

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஆலியா பட் தனது தாயாருடன் கடந்த பிப்ரவரி மாதம் வேதிகா பிரகாஷ் ஷெட்டி என்பவர் மீது போலீஸாரிடம் புகார் அளித்தார். அதாவது ஆலியா பட்டின் முன்னாள் உதவியாளர் வேதிகா பிரகாஷ் ஷெட்டி என்பவர் 2023-2025 காலகட்டத்தில் ஆலியா பட்டின் கையெழுத்தை போலியாக பயன்படுத்தி அவரின் எடர்னல் சன்ஷைன் புரொடக்சன்ஸ் நிறுவனத்தில் இருந்தும் வங்கிக் கணக்குகளில் இருந்தும் ரூ.76 லட்சம் மோசடி செய்ததாக அப்புகாரில் கூறப்பட்டிருந்தது.

வளைத்துப் பிடித்த போலீஸார்!

அப்புகாரின் அடிப்படையில் மும்பை போலீஸார் விசாரணையை தொடங்கிய நிலையில் கடந்த ஜூலை 8 ஆம் தேதி மாலை பெங்களூரில் வைத்து மும்பை ஜூஹு போலீஸார் ஆலியா பட்டின் முன்னாள் உதவியாளர் வேதிகா பிரகாஷ் ஷெட்டியை கைது செய்துள்ளனர். இந்த நிலையில் இவரை மிகத் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர் போலீஸார். 

ஆலியா பட் கடந்த 2022 ஆம் ஆண்டு பிரபல பாலிவுட் நடிகரான ரன்பீர் கபூரை  திருமணம் செய்துகொண்டார். தற்போது ஆலியா பட் “ஆல்ஃபா”, “லவ் அன்டு வார்” ஆகிய திரைப்படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

Arun Prasad

Recent Posts

இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!

டிரெண்டிங் ஹீரோயின் “டிராகன்” திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி தமிழ் இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்தவர்தான் கயாது லோஹர். “டிராகன்” திரைப்படத்தில்…

12 hours ago

அத்தையுடன் உல்லாசம்… மருமகனை கொடூரமாக தாக்கி திருமணம் செய்ய வைத்த மாமனார்!

அத்தையுடன் தகாத உறவு வைத்திருந்த மருமகனை தாக்கி வற்புறுத்தி திருமணம் செய்ய சொல்லி அடித்து துவைத்த மாமனார் தலைமறைவாகியுள்ளார். பீகார்…

13 hours ago

மோனிகாவாக மோகினி ஆட்டம் ஆடப்போகும் பூஜா ஹெக்டே? கூலி படத்தின் இரண்டாவது சிங்கிள் அப்டேட்!

பட்டையை கிளப்பிய முதல் சிங்கிள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14…

13 hours ago

கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸாகும் தனுஷின் மாஸ் ஹிட் திரைப்படம்? ரொம்ப புதுசா இருக்கே!

தனுஷின் பாலிவுட் அறிமுகம் நடிகர் தனுஷ் பாலிவுட்டில் கதாநாயகனாக அறிமுகமான திரைப்படம் “ராஞ்சனா”. இத்திரைப்படம் தமிழில் “அம்பிகாபதி” என்ற பெயரில்…

14 hours ago

செந்தில் பாலாஜி போல மாவட்ட செயலாளர்கள் அமைந்தால் எந்த பிரச்சனையும் இல்லை : உதயநிதி பாராட்டு!

கரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று கரூர் வந்தடைந்தார். தொடர்ந்து இன்று…

14 hours ago

ரிதன்யா உணர்வுகளை புரிஞ்சுக்கோங்க… கண்ணீர் விட்டு அழுத நடிகை அம்பிகா!

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் வரதட்சணத கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட ரிதன்யாவின் பெற்றோரை திரைப்பட நடிகை அம்பிகா நேரில் சந்தித்து…

15 hours ago

This website uses cookies.