பாலிவுட்டின் நட்சத்திரங்களான ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் பிரம்மாஸ்திரா படத்தில் முதன்முதலில் ஒன்றாக நடித்தனர். அந்த படத்திற்கு பிறகு காதலிக்கத் தொடங்கிய இந்த ஜோடி கடந்த 2019-ம் ஆண்டே திருமணம் செய்து கொள்ள இருந்தனர். ஆனால் ரன்பீர் கபூரின் தந்தை ரிஷி கபூர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
அதன்பிறகு இந்த ஜோடியின் திருமணம் ஒத்தி வைக்கப்பட்டது. கொரோனா காலத்தில் திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை என்று இருவரும் கூறி வந்தனர். அதன் பிறகு கடந்த ஆண்டு மும்பையில் உள்ள ரன்பீர் கபூரின் வாஸ்து இல்லத்தில் ரன்பீர் கபூர் – ஆலியா பட் திருமணம் நடைபெற்றது.
இத்திருமணத்தில் பல்வேறு நட்சத்திர பிரபலங்கள் கலந்துக்கொண்டு வாழ்த்தினர். திருமணத்திற்கு முன்பே ஆலியா பட் கர்ப்பமாக இருந்ததாகவும் அதனால் அவசர அவசராக திருமணம் நடைபெற்றது. பின்னர் இவர்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தார்.
இப்படி ஒரு நேரத்தில் இந்த ஜோடி பிரிந்து வாழ்ந்து வருவதாக பிரபல நடிகை கங்கனா ரனாவத் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ஆம், இது குறித்து பேசியுள்ள அவர், ரன்பீர் கபூர் சமீபத்தில் அவர் குடும்ப உறுப்பினர்களோடு லண்டன் சென்றார்.
ஆனால் மனைவி ஆலியா,மகளை அழைத்து செல்லவில்லை. காரணம் இருவரும் இப்போது பிரிந்து தான் வாழ்ந்து வருகிறார்கள். பணத்திற்காக திருமணம் செய்து கொண்டால் இப்படி தான் நடக்கும். ரன்பீர் கபூர் உண்மையிலே ஆலியாவை காதலித்து திருமணம் செய்யவில்லை.
அவர் மாஃபியா நெருக்கடியால் தான் திருமணம் செய்து கொண்டார். இந்த போலியான திருமணத்தை முடித்துக்கொள்ள முயற்சி நடந்து வருகிறது. ஆனால், விவாகரத்து செய்ய மாஃபியா கும்பல் விடமாட்டார்கள் என கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.