எல்லா பெண்களுக்கும் அட்லீ மாதிரி புருஷன் கிடைக்கணும்…. மனைவி பிரியா நெகிழ்ச்சி!

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் அட்லீ. இவர் ராஜா ராணி படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படமே சூப்பர் ஹிட் கொடுக்க இளம் வெற்றி இயக்குனராக வலம் வந்தார். அதை தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட தொடர் வெற்றி படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் டாப் இயக்குனர் என்ற இடத்தை பிடித்தார்.

அதையடுத்து அண்மையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி மாபெரும் வெற்றி கண்டுள்ளார். இவர் நடிகை பிரியாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். 8 வருடங்களுக்கு பிறகு அண்மையில் தான் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அட்லீ தொடர்ந்து திரைப்படம் இயக்குவதில் கவனத்தை செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் அட்லீ மனைவி பிரியா சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது கணவர் குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்துக்கொண்டார். அட்லீ எனக்கு மிகச்சிறந்த கணவர், அட்லீயின் வெற்றிக்கு நான் காரணமாக இருக்கிறேனா என்பது எனக்கு தெரியவில்லை. என்னுடைய வாழ்க்கையில் என்னை மிகவும் உத்வேகப்படுத்தியது எனது அம்மா. அவர் இல்லையென்றால் நான் அட்லீக்கு உறுதுணையாக இருந்திருப்பேனா என்பது தெரியவில்லை.

அவர் எனக்கு நல்ல நண்பர். எனக்கு முதுகெலும்பாக இருந்தது வருகிறார். அத்துடன் என் மகன் மீர் வந்து என்னுடைய வாழ்க்கையை ரொம்பவே மகிழ்ச்சியாக்கிவிட்டான். நாங்கள் அவனுடன் எதிர்காலத்தில் மகிழ்ச்சியான தருணங்களை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறோம். அட்லீ எனக்கு சிறந்த கணவராகவும், நல்ல மகனாகவும், நல்ல அப்பாவாகவும், சிறந்த மருமகனாகவும் இருக்கிறார். எல்லா பெண்களுக்கும் அட்லீ போன்று ஒரு கணவர் கிடைக்கவேண்டும் என வேண்டிக்கொள்கிறேன் என பிரியா மிகுந்த நெகிழ்ச்சியோடு பேசினார்.

UpdateNews360 Rajesh

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.