நேரம் படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். முதல் படமே மக்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. இதை தொடர்ந்து, இவர் இயக்கத்தில் வெளிவந்த மாபெரும் அளவில் வெற்றி அடைந்த திரைப்படம் தான் பிரேமம்.
கடந்த 2015 ஆம் ஆண்டு வெளிவந்த பிரேமம் படம் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும், சரி நம் மனதில் இருந்து நீங்காத இடம் பிடித்து விட்டது. இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளிவந்த கோல்ட் திரைப்படம் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வெற்றி பெறவில்லை.
இந்த நிலையில், ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக தான் சினிமாவில் இருந்து விலகுகிறேன் என்று கூறி இருந்தார். இயக்குனர் அல்போன்ஸுக்கு ஆட்டிசம் தொடர்புடைய பிரச்சனை இருப்பதாக அவரே அறிவித்திருந்தார். இதன் காரணமாக அவர் இனிமேல் திரைப்படங்கள் இயக்கப் போவதில்லை என அறிவித்திருந்தார். இந்நிலையில், சமீபகாலமாக அல்போன்ஸ் புத்திரன் தனது சோசியல் மீடியா பக்கத்தில் நடிகர், நடிகர்களை குறித்து சர்ச்சை கூறிய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.
இதனிடையே, தற்போது அல்போன்ஸ் புத்திரன் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு உள்ளார். அதில் அவர், “இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூல் பக்கத்தில் எந்த ஒரு பதிவையும் பதிவிட போவதில்லை என்றும், அதற்கு காரணம் என்னவென்றால் நான் சோசியல் மீடியாவில் பதிவிடும் பதிவுகள் என் அப்பா, அம்மா மற்றும், தன்னுடைய சகோதரிக்கு பிடிக்கவில்லை என்றும், என் உறவினர்கள் அவர்களை பயமுறுத்திக்கிறார்கள்” எனவே, “நான் அமைதியாக இருந்தால் எல்லாரும் நிம்மதியாக இருப்பார்கள் என நினைக்கிறேன், அப்படியே இருக்கட்டும்” என்று இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் பதிவிட்டு உள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.