கேமராவுடன் பின் தொடர்ந்த பத்திரிகையாளர்கள்..! நான் என்ன மிருகமா?.. எதுக்கு இப்படி பண்றீங்க..? ஆவேசமாக சீறிய நடிகை டாப்ஸி..! (வீடியோ)

தமிழில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய இயக்கி தனுஷ் நடித்த ஆடுகளம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை டாப்சி. இந்தப் படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இவர் தெலுங்கு, ஹிந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடிக்க தொடங்கினார்.

இந்திக்கு போன பிறகு தன் உடம்பை மிகவும் ஸ்லிம்மாக மாற்றிக்கொண்டார். ஹிந்தியில் நடிகர் அமிதாப்புடன் இவர் நடித்த பிங்க் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதற்கடுத்து இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களில் நடித்து வருகிறார். தமிழில் இவர் இறுதியாக காஞ்சனா என்ற படத்தில் நடித்து இருந்தார்.

இதனிடையே தான் நடிக்கும் படத்தின் புகைப்படங்கள் மற்றும் அவரின் புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

நடிகை டாப்சி செய்தி ஊடகங்கள் புகைப்படம் எடுப்பது பேன்றவற்றை வெகு காலமாகவே எதிர்த்து வருகிறார். இதனால் பத்திரிகையாளர்களுக்கும் இவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் நடைபெற்று வருவது வாடிக்கையாக உள்ளது. இதனால் நெட்டிசங்கள் பலரும் நடிகை டாப்சி பன்னுவை இணையத்தில் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் டாப்சி பன்னு கூறியிருந்தார். நான் 10 வருடங்களாக ஹிந்தி சினிமாவில் நடித்து வருகிறேன். எனவே என்னை பற்றி செய்தி ஊடகங்களுக்கு நன்றாகவே தெரியும் நான் புகைப்படம் எடுப்பதை விரும்பமாட்டேன் எனவும், அப்படியிருக்கும் போது நான் என்னுடைய வீட்டை விட்டு வெளியில் வரும்போது புகைப்படம் எடுப்பது, நான் எங்காவது சென்றால் பின்தொடர்ந்து வருவது போன்றவை எனக்கு பிடிக்கவில்லை என்று தெரிவித்து இருந்தார். மேலும் சில நேரங்களில் கார் கண்ணாடியில் கேமராவை வைத்தெல்லாம் என்னை புகைப்படம் எடுத்திருப்பதுண்டு அதனை நான் முற்றிலுமாக எதிர்க்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து நடிகை டாப்சி பன்னு கூறுகையில், நான் ஒரு நடிகையாக இருந்தாலும் மற்றவர்கள் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் நுழைய யாருக்கும் அனுமதி கிடையாது. சினிமாவில் நடிகையாக இருப்பதினால் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது.

நானும் மற்றவர்களை போலத்தான் எந்த பாதுகாப்பும் இல்லாமல் தெருக்களில் நடக்கிறேன். அதனால் அதற்காக என்னுடைய சுதந்திரத்தை யாரும் என்னிடம் இருந்து பறிக்க அனுமதி இல்லை. நான் வெளியே செல்லும் போது என்னை கேமெராவுடன் பத்திரிகையாளர்கள் பின் தொடர்கிறார்கள் நான் என்ன மிருகக்காட்சி சாலையில் உள்ள மிருகமா? என்று தன்னுடைய ஆதங்கத்தை அந்த பேட்டியில் நடிகை டாப்சி பன்னு கூறியிருந்தார்.

Poorni

Recent Posts

இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?

நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…

12 hours ago

வெகு கால இடைவெளிக்குப் பிறகு டிவி பேட்டியில் தோன்றும் அஜித்! அதிசயம் ஆனால் உண்மை!

பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…

14 hours ago

Bye Bye Stalin என மக்கள் சொல்லும் போது சட்டை கிழித்து தவழாமல் இருந்தால் சரி : இபிஎஸ் விமர்சனம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…

14 hours ago

சிம்புவே ரெடி; ஆனா ஷூட்டிங் ஆரம்பிக்கல! இயக்குனர் செய்த காரியத்தால் தள்ளிப்போகும் STR 49?

STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…

15 hours ago

அஜித் விருது வாங்கிய நேரம்.. ஹீரா குறித்து அவதூறு : பின்னணியில் அரசியலா?

நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…

15 hours ago

அவருக்கு நான் அம்மாவா? கடுப்பான கஸ்தூரி : எந்த நடிகர்னு தெரியுமா?!

தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…

16 hours ago

This website uses cookies.