நடிகையாக அறிமுகமான புதிதிலே சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் அதன் பின்னர் மிகப்பெரிய அளவில் உச்ச நடிகையாக இடம் பிடித்தவர் நடிகை அமலா பால். இவர் சிந்து சமவெளி படத்தில் தனது வாழ்க்கையை துவங்கி பின்னர் மைனா , தெய்வத் திருமகள் , வேட்டை , காதலில் சொதப்புவது எப்படி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
தலைவா படத்தில் நடித்த போது அப்படத்தின் இயக்குனர் ஏ. எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். ஆனால், அமலா பால் நடத்தை சரியில்லை என்பதால் விவகாரத்து செய்துவிட்டார். அதன் பின்னர் மாஜி கணவர் வேறு ஒரு திருமணம் செய்துக்கொண்டார். அவருக்கு ஒரு மகனும் இருக்கிறான்.
இதனிடையே, மும்பையை சேர்ந்த நபர் ஒருவரை காதலித்து வந்த அமலா பால் அவருடன் லிங்க் டூ கெதரில் வாழ்ந்து ரகசிய திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் அவரையும் புரிந்துவிட்டு சுதந்திரமாக சுற்றி திரிந்து வருகிறார். எப்போதும் சமூகவலைத்தளங்களில் படு கவர்ச்சியான போட்டோ மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.
மேலும் படிக்க: படப்பிடிப்பில் நடந்த விபரீதம்.. விஜய்யின் கையில் ஏற்பட்ட பலத்த காயம்.. வைரல் போட்டோ..!
இந்நிலையில், சமீபகாலமாக கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வந்த இவர், தனது நீண்ட நாள் நண்பர் ஜெகத் தேசய் என்பவரை திருமணம் செய்து கொண்டு, அவ்வப்போது குடும்பத்துடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு வந்தார். சமீபத்தில், கணவருடன் கைக்குழந்தையை வைத்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்தார்.
இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து, தனது கணவருடன் நேரத்தை செலவிட்டு தன்னை கணவர் எப்படியெல்லாம் கவனித்துக் கொள்கிறார் என்பதை அடிக்கடி வீடியோவாக வெளியிட்டு தான் ரொம்பவே சந்தோஷமாக இருப்பதாக வெளிக்காட்டி வந்த அமலா பால். இதற்கு பின்னர், பிரித்திவிராஜ் நடிப்பில் உருவாகிய ஆடுஜீவிதம் படத்தில் அமலா பால் அவருக்கு ஜோடியாக நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தார். இந்நிலையில், அமலாபால் நிறைமாத கர்ப்பிணியாக உள்ள நிலையில் விரைவில் அவர் அம்மாவாக போகிறார். இந்நிலையில், கேரளாவில் நடைபெறும் உலகின் மிகப்பெரிய கர்ப்பிணிகளுக்கான பேஷன் ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்க போவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: அட சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே Adjustment பண்ண சொல்றாங்க.. பொன்னி சீரியல் நடிகை பகீர்..!
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.