அடுத்த ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலை ஒரு அரசியல்வாதியாக எதிர்கொள்ளவுள்ளார் விஜய். தற்போது நடித்துக்கொண்டிருக்கும் தனது கடைசி திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தில் நடித்து முடித்துவிட்டு வருகிற ஜூன் மாதம் முதல் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வருகின்றன.
இந்த வேளையில் “ஜனநாயகன்” திரைப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வரும் நிலையில் மமிதா பைஜு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளிவந்த “பகவந்த் கேசரி” திரைப்படத்தின் ரீமேக் என்று கூறப்பட்டாலும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளிவரவில்லை.
இந்த நிலையில் “ஜனநாயகன்” திரைப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடி நிறுவனம் ரூ.115 கோடிக்கு விலைக்கு வாங்கியுள்ளதாம். ஆனால் “லியோ” திரைப்படத்தின் ஓடிடி வியாபாரத்தை விட இந்த தொகை மிகவும் குறைவு என்று கூறப்படுகிறதாம். அது மட்டுமல்லாது பிரபல மூத்த சினிமா பத்திரிக்கையாளரான வலைப்பேச்சு பிஸ்மி, “ஜனநாயகன்” திரைப்படம் 2026க்கு தள்ளிப்போனதற்கான காரணம் குறித்து ஒரு விளக்கத்தை அளித்துள்ளார்.
“ஜனநாயகன் படக்குழு இத்திரைப்படத்தின் ஓடிடி உரிமத்தை விற்பதற்காக அமேசான் நிறுவனத்தை அணுகியது. ஆனால் இந்த வருடத்திற்கான லைன் அப் முடிந்துவிட்டது. நீங்கள் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியிடுவதாக இருந்தால் சொல்லுங்கள், நாங்கள் வாங்கிக்கொள்கிறோம் என அமேசான் நிறுவனம் கூறிவிட்டது. இதன் காரணமாகத்தான் இத்திரைப்படம் 2026 ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளிவருகிறது” என்று பிஸ்மி தெரிவித்துள்ளார்.
“ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது. சமீப காலமாக ஒரு திரைப்படத்தின் வெளியீட்டை ஓடிடி நிறுவனமே முடிவு செய்கிறது என்று பரவலாக பேச்சுக்கள் அடிபடுகின்றன. ஓடிடி உரிமத்தை விற்ற பிறகுதான் திரையரங்குகளில் வெளியாகும் தேதியை அறிவிக்க முடிகிறது. இதற்கு “ஜனநாயகன்” திரைப்படமும் விதிவிலக்கு அல்ல என்று தெரிய வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.