பாலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் அமிதாப் பச்சன், 60 ஆண்டுக்களாக திரையுலகில் கொடிக்கட்டி பறந்தார். இப்போதும் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். திரைப்படங்களில் நடித்து வருவது மட்டுமின்றி ஹோட்டல் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வருவது மட்டுமின்றி சினிமாவிலும் முதலீடு செய்து இருக்கிறார்.
இதன்மூலம் இந்தியாவின் டாப் பணக்காரர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் அமிதாப் பச்சன். மேலும் இவரின் சொத்துமதிப்பு மட்டும் ரூ. 3000 கோடியை தாண்டும் என சொல்லப்படுகிறது. தற்போது 80 வயதாகும் அமிதாப் பச்சன் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவருடைய மகன் அபிஷேக் பச்சனும் தன் தந்தையைப் போலவே பாலிவுட்டில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்து வருகிறார். இவர், உலக அழகி ஐஸ்வர்யாவை திருமணம் செய்து உலக இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். தற்போது அமிதா பச்சன் படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், அமிதாப் பச்சனின் குறித்த தகவல் ஒன்று வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. தற்போது, கதையின் நாயகனாக நடிப்பதை குறைத்துக் கொண்ட அமிதாப்பச்சன் பெரிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த வருகிறார். மகாநதி படம் இயக்கிய நக் அஸ்வின் இயக்கிய கல்கி படத்தில் மகாபாரத கதையில் இடம் பெற்ற அஸ்வத்தம்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அமிதாப்பச்சன்.
பிரபாஸ், கமலஹாசன், தீபிகா படுகோன் என நாட்டின் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். 27ஆம் தேதி படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் pre ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசும் போது நாக் அஸ்வின் படம் குறித்து சொன்னபோது என் கதாபாத்திரம் எப்படி இருக்கும் பிரபாஸ் எப்படி இருக்க போகிறார் போன்றவற்றை கூறினார். படத்தில் பிரபாஸை தூக்கி எறியும் மிகப்பெரிய ஆள் என் கதாபாத்திரம். அதற்காக பிரபாஸின் ரசிகர்கள் அனைவரும் தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள். படத்தில் நான் செய்வதை பார்த்த பிறகு என்னை படுகொலை செய்யாதீர்கள் என்று வேடிக்கையாக பேசியுள்ளார்.
நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…
சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…
“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர்…
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
This website uses cookies.