விபத்தில் படுகாயம் அடைந்த சூப்பர் ஸ்டார்.. விலா எலும்பு உடைந்து தீவிர சிகிச்சை..!

படப்பிடிப்பில் சண்டைக்காட்சியின் போது சூப்பர் ஸ்டாருக்கு ஏற்பட்ட காயத்தால் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது.

இந்தி திரையுலகில் பிக் பி என அழைக்கப்படும் சூப்பர் ஸ்டாரான நடிகர் அமிதாப் பச்சன் புராஜெக்ட் கே என பெயரிடப்பட்ட படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொண்டு நடித்து வருகிறார்.

இதற்காக ஐதராபாத் நகரில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அதில் சண்டை காட்சி ஒன்று படமாக்கப்பட்டு வந்தது. அப்போது, நடிகர் அமிதாப்புக்கு வலது இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டு உள்ளது. தசை பகுதியும் பாதிப்படைந்து உள்ளது.

இதனால், படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு அவர் உடனடியாக ஐதராபாத் நகரில் உள்ள ஏ.ஐ.ஜி. மருத்துவமனையில் சேர்ந்து உள்ளார். அவருக்கு டாக்டர்கள் சி.டி. ஸ்கேன் செய்து உள்ளனர்.

இதன்பின்பு, அவர் ஓய்வெடுக்க வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கி உள்ளனர். இதனை தொடர்ந்து, அவர் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். வீட்டிலேயே இருந்தபடி ஓய்வு எடுத்து வருகிறார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது:- “ஒரு ஆக்ஷன் காட்சியில் நடிக்கும் போது தனக்கு காயம் ஏற்பட்டது என்றும், விலா பகுதியில் தசை கிழிவு மற்றும் rib cartilage உடைந்து இருக்கிறது என்றும், ஹைதராபாத்தில் இருக்கும் ஹாஸ்பிடலுக்கு கொண்டு சென்றார்கள் எனவும், அங்கு சிகிச்சை பெற்று மும்பைக்கு திரும்பி இருப்பதாகவும், ரெஸ்ட் எடுக்க சொல்லி இருக்கிறார்கள்.” என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் “ஆம், மூச்சு விடும்போதும் நகரும்போதும் வலி அதிகம் இருக்கிறது என்றும், சரியாக பல வாரங்கள் ஆகலாம் எனவும், வலி குறைய மருந்துகள் எடுத்துக்கொண்டிருக்கிறேன்” என அமிதாப் அந்த விபத்து பற்றி குறிப்பிட்டு இருக்கிறார்.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.