சினிமா / TV

இது கூட பண்ணலைன்னா நீங்க இயக்குனரா?- அட்லீயை கண்டபடி கேட்ட ஆனந்த்ராஜ்!

பயமூட்டும் வில்லன்

தமிழ் சினிமா வில்லன் நடிகர்களில் மிகவும் டெரர் ஆன வில்லனாக வலம் வந்தவர் ஆனந்த்ராஜ். குறிப்பாக பெண்களிடம் தகாத முறையில் நடந்துகொள்ளும் வில்லன் கதாபாத்திரத்தில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆதலால் பெண்களின் மத்தியிலும் இவரது நடிப்பு சற்று பயத்தை உண்டு பண்ணக்கூடியது. எனினும் பின்னாளில் குணச்சித்திர கதாபாத்திரம், நகைச்சுவை கதாபாத்திரம் என கலந்துகட்டி நடிக்கத் தொடங்கிவிட்டார் ஆனந்த்ராஜ். 

இந்த நிலையில் விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவான “பிகில்” திரைப்படத்தில் தான் நடித்த காட்சிகளை நீக்கியது குறித்து ஆதங்கத்தோடு ஒரு பேட்டியில் பேசியுள்ளார் ஆனந்த்ராஜ். 

நீங்க எல்லாம் ஒரு இயக்குனரா?

அப்பேட்டியில் நிருபர், “பிகில் படத்தை நீங்கள் இன்னும் பார்க்கவில்லை என்று ஒரு பத்திரிக்கை பேட்டியில் கூறியிருக்கிறீர்கள். அந்தளவுக்கு அந்த படத்தில் உங்களுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டிருந்தது? என கேட்டார்.

அதற்கு ஆனந்த்ராஜ், “ஒரு கதாபாத்திரத்திற்கு அறிமுக காட்சி என்று ஒன்று இருக்கும். பிகில் படப்பிடிப்பில் என்னுடைய அறிமுக காட்சியை படமாக்கினார்கள். ஆனால் பிகில் படத்தில் அந்த காட்சி இடம்பெறவில்லை. அந்த காட்சியையே வைக்கவில்லை என்றால் எப்படி ரசிகர்களுக்கு அந்த கதாபாத்திரத்தை காட்டப்போகிறீர்கள். 

அந்த காட்சி இடம்பெறவில்லை என்று தெரிந்தவுடன் ஏன்? என்ற கேள்விதான் எனக்குள் எழுந்தது. இது யார் செய்த பாவம்? எனக்கும் உங்களுக்கும் என்ன தனிப்பட்ட பிரச்சனையா? அந்த காட்சியை எடுக்காமல் இருந்தாலாவது பரவாயில்லை. ஆனால் அந்த காட்சியை எடுத்தும் படத்தில் வைக்கவில்லை என்றால் யாரை கோபித்துக்கொள்வது. 

பின்பு எதற்கு அந்த படத்தை பார்க்கவேண்டும்? வேண்டாம், நன்றி என்று சொல்லிவிட்டேன். ஒரு அறிமுக காட்சியை கூட உங்களால் வைக்க முடியவில்லை என்றால் அப்படி என்னதான் பண்ணப்போகிறோம்?” என மிகவும் ஆதங்கத்தோடு பதிலளித்திருந்தார். 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.