எல்லாம் TRP-க்காக தான்.. விஜய் டிவியில் இருந்து விலகியதற்கான காரணத்தை வெளியிட்ட பிரபலம்..!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் இந்திய அளவில் மிக பிரபலமான பாடலாக திகழ்ந்தவர் அனந்த் வைத்தியநாதன். இவர் பாடகர் மட்டும் இல்லாமல் பல இசை அமைப்பாளர்களை உருவாக்கியுள்ளார். விஜய் டிவி ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இவர் நடுவராக பணியாற்றி வந்தார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் பல போட்டியாளர்களுக்கு இவர் முறையான பயிற்சி கொடுத்து பல பாடகர்களை உருவாக்கியுள்ளார். இவரை சில வருடங்களாகவே இந்த நிகழ்ச்சியில் காணவில்லை, என்ன என்று விசாரித்து பார்த்ததில் இவருடைய தொண்டையில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக குரல் வளம் பாதிக்கப்பட்டதாகவும், இதனால் மருத்துவர்கள் வேகமாக பாடக்கூடாது என்று கூறியிருந்ததாக தெரியவந்தது.

மேலும், இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி போட்டியாளர்களுக்கு பாடல் சொல்லிக் கொடுத்து தன்னுடைய திறமையை வளர்த்துக் கொண்டதன் மூலமாக இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது ஆனால் வெறும் 21 நாட்கள் மட்டுமே பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பின்னர் இவர் வெளியே வந்தார்.

இவர் பாடகர் மட்டும் இல்லாமல் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்தும் இருக்கிறார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி குறித்து இவர் கூறியதாவது, தான் எப்போதுமே சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியும் விஜய் டிவியும் மறக்க முடியாது என்றும், தனக்கு ஒரு பெரிய அளவில் மகிழ்ச்சியை தந்தது என்றால், அது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தான் என்றும், ஒரு காலத்தில் தான் அந்த நிகழ்ச்சியில் இருக்கும் போது பலர் தன்னிடம் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகவே பழகியதாகவும் தெரிவித்திருந்தார்.

அதேபோல சிலர் தன்னிடம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடுவது ரெண்டு மூணு பாடல் தானே எதுக்காக வெட்டி கதை பேசிகிட்டு இருக்கீங்க என்று கேட்டதாகவும், அது வேற ஒன்னும் இல்லைங்க எல்லாம் டிஆர்பிக்காக என்று தான் தெரிவித்ததாகவும், ஒவ்வொரு வாரமும் டிஆர்பி குறைந்தால் அவர்கள் எவ்வளவோ கேள்விக்கு பதில் சொல்ல வேண்டி இருக்கும் என்றும் எல்லா நிகழ்ச்சிகளும் டிஆர்பி அடிப்படையாகக் கொண்டுதான் நடக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

தன் பலருக்கு அவர்களுடைய திறமையை மெருகேற்றி இருந்ததாகவும், அதற்காக அவர்கள் தொடர்ந்து மரியாதை தர வேண்டும் என ஆசைப்படவில்லை என்றும், அந்த கலையை அவர்கள் மறந்து விடாமல் இருந்தால் சரி, அந்த கலை அழிந்து விட கூடாது என்றும் சரியாக அவர்கள் பயன்படுத்திக் கொள்வதே தன்னுடைய விருப்பம் எனவும் தெரிவித்துள்ளார். சிலர் பேரும் புகழும் கிடைத்தவுடன் தன்னை கண்டு கொள்ளவில்லை என்றும், அது தனக்கு சற்று வேதனையாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

Poorni

Recent Posts

இவர் வாய் விட்டால் விளங்குமா? குபேரா படத்துக்கு முதல் விமர்சனத்தை அள்ளித் தெளித்த பிரபலம்!

தனுஷின் குபேரா சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் வருகிற ஜூன் 20…

7 minutes ago

விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கும் அதிமுக.. திமுக அரசுக்கு எதிராக வெளியான அறிவிப்பு..!

திமுக அரசுக்கு எதிராக விவசாயிகளுடன் இணைந்து அதிமுக உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளது. இதையும் படியுங்க: மாயமான 28 வயது பெண்…

32 minutes ago

பிச்சை எடுத்துப் பாருங்க அருமை புரியும்- நயன்தாராவை டார்கெட் செய்தாரா தனுஷ்?

நயன்தாரா VS தனுஷ் கடந்த நவம்பர் மாதம் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண நிகழ்வு “நயன்தாரா பியாண்ட் தி ஃபேரி டேல்”…

54 minutes ago

மாயமான 28 வயது பெண் : துடித்துடித்த 4 உயிர்கள்.. விசாரணையில் ஷாக்!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சின்ன குளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்லம்மாள்(65), அவரது மகள் காளீஸ்வரி (45), காளீஸ்வரியின் மகள்…

2 hours ago

ஆர்யா மீது வரி ஏய்ப்பு புகார்? வருமான வரித்துறையினரின் திடீர் சோதனைக்கு காரணம் என்ன?

ஆர்யாவுக்குச் செந்தமான உணவகங்கள் தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளாக கதாநாயகனாக வலம் வருபவர் ஆர்யா. தொடக்கத்தில் பல திரைப்படங்கள் அவரது…

2 hours ago

சினிமா மட்டுமல்ல… தொழிலிலும் மாஸ் காட்டும் ஆர்யா.. தலைசுற்ற வைக்கும் சொத்து மதிப்பு!

நடிகர் ஆர்யா ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்கத்தில் வெளியான உள்ளம் கேட்குமே படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். என்னதான் அந்த படத்தில்…

2 hours ago

This website uses cookies.