பிரபல தொகுப்பாளினியான விஜே பாவனா விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பேமஸ் ஆனார். இவர் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். தொலைக்காட்சி தொகுப்பாளர், கிரிக்கெட் வர்ணனையாளர், வீடியோ ஜாக்கி, பின்னணி பாடகர் மற்றும் நடனக் கலைஞர் என பல திறமைகளை கொண்டு சிறந்து விளங்கி வருகிறார்.
ஒரு நேரத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான எல்லா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வந்தது விஜே பாவனா தான். ஆனால், சில வருடங்களாகவே அவர் விஜய் தொலைக்காட்சியில் தலைகாட்டாமல் போயிவிட்டார். இதனிடையே கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். அதன் பின்னர் தற்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டிவியில் ஒளிபரப்பாளராக பணிபுரிகிறார் மற்றும் சேனலுக்காக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.
இதனிடையே ஏன் விஜய் தொலைக்காட்சியில் பணி செய்யவில்லை என பேட்டி கேட்டதற்கு, எல்லாம் நன்றாக தான் சென்றுக்கொண்டிருந்தது. திடீரென பிரியங்கா என ஒருத்தர் வந்தார். அவரால் என் கெரியரே காலி ஆகிடுச்சு என மறைமுகமாக கூறினார்.
விஜய் டிவியின் ஸ்டைலே இப்போ வேற…. அவர்கள் இப்போது நிகழ்ச்சியை காமெடியாக கொண்டு செல்வதே நோக்கமாக வைத்துள்ளார்கள். அதற்கு பிரியங்கா ஆப்டாக இருந்ததால் அவரையே எல்லா நிகழ்ச்சிகளிலும் போட்டு என்னை போன்ற ஆட்களை வெளியேற்றிவிட்டர்கள்.
என்னுடைய ஸ்டைலுக்கு அது சரியாக வராது. இதனால் நான் மீண்டும் விஜய் டிவிக்கு வர வாய்ப்பு இல்லை என்று அவர் கூறியுள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் அவர் கூறிய இந்த தகவல் தற்போது மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.
நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…
சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…
“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர்…
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
This website uses cookies.