நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகி பின்னர் முன்னணி நடிகையாக இருக்கிறார். பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் சரத்குமாருடன் ஜோடிசேர்ந்து திரையுலகில் நடிகையாக அறிமுகமானார்.
நடிகைகள் கதைக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களில் நடத்து வருகிறார். அந்த வகையில் ‘நோ என்ட்ரி’ படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் அழகு கார்த்திக் இயக்கியுள்ளார். இவர் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ளார். நடிகர் ஜெய் நடிப்பில் உருவான ‘நீயா 2’ படத்தை தயாரித்த ஜம்போ சினிமாஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் மேகாலயா மாநிலம் சிரபுஞ்சியைச் சுற்றியுள்ள காடுகளிலேயே படமாக்கியுள்ளது படக்குழு. இந்தப் படத்தில் நிஜமாகவே நாய்களுடன் சண்டையிடும் காட்சியில் நடித்துள்ளாராம் ஆண்ட்ரியா. நாய்களுடன் சண்டையிடும் காட்சி படமெடுக்கும் போது படக்குழுவினர் சற்று பயந்துள்ளனர். ஆனால் ஆண்ட்ரியாவுக்கு சிறு காயம் மட்டுமே ஏற்பட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் இந்த படத்தில் பாடல்கள் நாளை வெளியாகிறது. மலைப்பிரதேசத்தில் மனிதர்களை வேட்டையாடும் நாய்களிடம் சிக்கும் ஆண்ட்ரியா தப்பித்தாரா இல்லையா என்பது தான் ‘நோ என்ட்ரி’ படத்தின் கதை என அந்த படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் முக்கிய காட்சிகளுக்காகப் பயிற்சி அளிக்கப்பட்ட15 ஜெர்மன் ஷெப்பர்டு நாய்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் அடுத்துள்ள சின்னயங்குளம் பகுதியில் புதிதாக பெட்ரோல் பங்க் சில தினங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. 24 மணி நேரமும் செயல்படும்…
உச்ச நட்சத்திரம் தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர்களில் ஒருவர்தான் ஜூனியர் என்டிஆர். இவரது கெரியரின் தொடக்கத்தில் பல…
சன்டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பான சீரியல் சுந்தரி. இல்லத்தரசிகளை கட்டிப்போட்ட சீரியலுக்கு சொந்தக்காரியாக இருப்பவர் கேப்ரில்லா. கிராமத்து பெண்ணாக கலக்கிய…
வழக்கில் சிக்கிய ரஹ்மான் இசைப்புயல் எனவும் ஆஸ்கர் நாயகன் எனவும் கொண்டாடப்படுபவர் ஏ.ஆர்.ரஹ்மான். கிட்டத்தட்ட 33 வருடங்களாக இந்திய சினிமாவின்…
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரம் பகுதியில் பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்து கிடப்பதாக போலீசாருக்கு…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த தொண்டன் துளசி பகுதியில் உள்ளது பிரபல தொழிலதிபரும் சாய் சுப்ரபாதம் ஹோட்டல் மற்றும் ஆங்கர்…
This website uses cookies.