2015 இல் கௌதம் மேனன் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவான என்னை அறிந்தால் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா. இவர் நானும் ரவுடி தான், மிருதன், விஸ்வாசம், Queen Web Series என பல Platformகளில் நடித்து வந்தார். தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் இவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.
சமீப காலமாக ஹீரோயின்களுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அனிகா. ‘குட்டி நயன்தாரா’ என அழைக்கப்படும் அனிகா கதாநாயகியாக நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் ‘ஓ மை டார்லிங்’. ரொமான்டிக் திரைப்படமாக உருவாகி இருக்கும் இப்படத்தை ஆல்ஃப்ரெட் டி சாமுவேல் இயக்கியுள்ளார். இதில் மெல்வின் ஜி பாபு நாயகனாகவும் நடித்துள்ளார்.
இதன் டிரைலர் வெளியாகி, அதில் இடம்பெற்ற முத்தக் காட்சிகள், படுக்கையறை காட்சிகள் குறித்து சோசியல் மீடியாவில் அதிகளவில் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன் ஓ மை டார்லிங் படம் திரையில் வெளியானது. படம் படுமோசமான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள கிளாமர் காட்சிகள் குறித்து அனிகா பேசியபோது,”இந்தத் திரைப்படம் முழுநீள காதல் கதை எனும்போது அதில் முத்தக்காட்சிகள் தவிர்க்க முடியாதது.
இயக்குநர் கதையில் முத்தக் காட்சிகளின் முக்கியத்துவம் குறித்து சொன்னார். கதைக்குத் தேவைப்பட்டதால்தான் நடித்தேனே தவிர அதில் ஆபாசம் எதுவும் இருக்காது. படம் பார்க்கும்போது அது புரியும்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நடிகை அனிகாவிடம் முத்தக் காட்சியில் நடித்த போது சங்கடமாக இருந்ததா? என ஒருவர் கேள்வி எழுப்பியதற்கு, தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பதில் அளித்திருக்கும் அனிகா,”நடிக்கும்போது அந்த அளவு உணரவில்லை. மக்கள் இதனை இவ்வளவு பெரிய விஷயமாக எடுத்துக்கொண்டது தான் வினோதமாக இருக்கிறது. தர்ம சங்கடமாகவும் உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…
நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
This website uses cookies.