தமிழ், மலையாள சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் அனுபமா பரமேஸ்வரன். “பிரேமம்” திரைப்படத்தின் மூலம் இளைஞர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட அனுபமா, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் “கொடி”, “தள்ளிப்போகாதே”, “சைரன்”, “டிராகன்” ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ள அனுபமா பரமேஸ்வரன் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் “பைசன் காளமாடன்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய அனுபமா பரமேஸ்வரன், தவறாக பரப்பப்பட்ட வதந்தியின் மூலம் 6 மாதங்களாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்ததாக கூறியுள்ளார். இது குறித்து அவர் பேசியபோது, “ரங்கஸ்தளம் படத்திற்காக இயக்குனர் சுகுமார் என்னை அணுகினார். அப்படத்தில் நடிப்பதாகவும் இப்புக்கொண்டேன். ஆனால் அவர்கள் திடீரென எனக்கு பதிலாக வேறு ஒரு நடிகையை ஒப்பந்தம் செய்துவிட்டார்கள்.
ஆனால் நான்தான் அந்த படத்தை நிராகரித்ததாக வதந்திகள் பரவியது. இதன் காரணமாக நான் 6 மாதங்கள் வீட்டில் வேலை இல்லாமல் இருந்தேன்” என கூறியுள்ளார். இப்பேட்டி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.