நல்ல அழகு, திறமையான நடிப்பு என ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களையும் வசீயம் செய்து வைத்திருப்பவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி. கர்நாடகாவை சேர்ந்தவரான இவர் யோகா டீச்சராக தனது கெரியரை துவங்கினார். அதன் பின்னர் பின்னணி பாடகியாக சினிமாவில் நுழைந்தார். அதன் பின்னர் நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்க தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் நடித்து வருகிறார்.
2005-ல் இவர் நடித்த முதல் திரைப்படம் -நாகார்ஜூனாவுடன் இணைந்து நடித்த சூப்பர் எனும் தெலுங்கு திரைப்படம் தான். அதன் பின்னர் 2006-ல், ரெண்டு எனும் திரைப்படத்தில் மாதவனுடன் நடித்து தமிழில் அறிமுகமானார். இதுவரை 40-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆரம்பத்தில் கவர்ச்சி தாராளமாக காட்டி நடித்த அனுஷ்கா அருந்ததி திரைப்படத்தில் மிகச்சிறந்த நடிப்புத்திறனை வெளிப்படுத்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
மரியாதை மிக்க அப்படத்தில் நடித்த பிறகு கவர்ச்சியை ஏறகட்டிவிட்டு அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அருந்ததி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்ததுடன், அனுஷ்காவுக்கு நல்ல பெயரையும், புகழையும் பெற்றுத்தந்தது. தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்து வந்த அவர் வரலாற்று வெற்றி திரைப்படமான பாகுபலி படத்தில் நடித்து உலகம் முழுக்க பிரபலம் ஆனார்.
அந்த படத்தில் நடித்தபோது பிரபாஸ் உடன் காதல் வயப்பட்டு சில வருடம் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார்கள். இதனிடையே அனுஷாகாவிற்கு பெற்றோர்கள் வேறொறு தொழிலதிபரை வரன் பார்க்க பணத்திற்காக பிரபாஸை கழட்டிவிட்டு சென்றார். ஆனால், பிரபாஸ் விட்ட சாபமோ என்னவோ இதுவரை அவருக்கு திருமணம் ஆகவே இல்லை.
இந்நிலையில் இதுவரை யாருக்கும் தெரிந்திராத விஷயம் ஒன்று கசிந்துள்ளது. ஆம், அனுஷ்கா பிரபாஸை காதலிப்பதற்கு முன்னர் ஆர்யாவுடன் நட்பு முறையில் நெருக்கமாக பழகிவந்துள்ளார். அதாவது சைஸ் ஜீரோ, இரண்டாம் உலகம் போன்ற படங்களில் நடித்தபோது அவருடன் ஏற்பட்ட நட்பு மிகவும் அழுத்தமாக இருந்ததாம்.
மேலும், ஆர்யாவின் பிரியாணியை சுவைத்து அதற்கு அடிமையாக கிடந்தாராம் அனுஷ்கா. அனுஷ்காவிற்கு மட்டுமில்ல அவருடன் நடிக்கும் பல நடிகைகள் ஆர்யா சமைக்கும் பிரியாணியை விரும்பி சாப்பிடுவார்களாம். இரண்டாம் உலகம் படத்தில் அனுஷ்காவின் நடிப்பை பார்த்து ராஜமௌலி பாகுபலி படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தாராம். அப்படத்தில் பிரபாஸ் உடன் ஏற்பட்ட நெருக்கத்தினால் அவரை காதலித்தார். பின்னர் அவரையும் பிரிந்துவிட்டு 42 வயது வரை முரட்டு சிங்கிளாக இருக்கிறார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.