வட இந்தியாவில் நம்மை மக்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதே மதராஸி படத்தின் கதை என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கூறியுள்ளார்.
சென்னை: இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படம் மதராஸி. லட்சுமி மூவிஸ் சார்பில் என்.லட்சுமி பிரசாத் தயாரிக்கும் இந்தப் படத்தில், ருக்மணி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன் மற்றும் சபீர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
அனிருத் இப்படத்திற்கு இசை அமைக்கிறார். சுதீப் எலமான் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தின் டைட்டில் டீசர், சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று வெளியானது. இதன்படி, இப்படத்திற்கு ‘மதராஸி’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஆக்ஷன் களத்துடன் உருவாகி வரும் இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது.
இந்த நிலையில், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் மதராஸி படம் குறித்து சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதில், “தற்போது சிவா (சிவகார்த்திகேயன்) ஆக்ஷன் கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வருகிறார். எனவே, மதராஸி திரைப்படம் சிவகார்த்திகேயனின் சினிமா வாழ்க்கையில், அவரை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் படமாக கண்டிப்பாக அமையும்.
இந்தப் படம், வட இந்தியாவில் உள்ள மக்கள் நம்மை எப்படி பார்க்கிறார்கள் என்பதை வைத்து கதைக்களம் இருக்கும். வட இந்திய மக்கள் தென்னிந்திய மக்களைக் குறிப்பிடும் வார்த்தை தான் மதராஸி. அதனால்தான், படத்திற்கு இந்தப் பெயர் வைக்கப்பட்டது” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: படம் நடிக்க கூப்பிடமாட்டிங்கறாங்க படுக்கத்தான் கூப்பிடுறாங்க : பிரபல நடிகை ஆவேசம்!
மேலும், வடக்கன்ஸ் பாவங்கள், ரயில் பாவங்கள் என பிரபல யூடியூபர்ஸான கோபி – சுதாகர் பரிதாபங்கள் யூடியூப் சேனலில் வெளியிட்டு வருவதை, நகைச்சுவைக்குப் பதிலாக உணர்வுப்பூர்வமான படமாக மதராஸி இருக்கும் என ரசிகர்களும், சினிமா விமர்சகர்களும் கருதுகின்றனர்.
மேலும், ஏ.ஆர்.முருகதாஸ், தற்போது சல்மான் கான், ராஷ்மிகா மந்தனா நடிக்கும் ‘சிக்கந்தர்’ என்ற இந்திப் படத்தை இயக்கி வருகிறார். இதனை முடித்துவிட்டு ‘மதராஸி’ படத்தின் மீதி படப்படிப்பைத் தொடர்வார் என்று தெரிகிறது. அதேநேரம், சிவகார்த்திகேயன், சுதா கொங்கரா இயக்கும் ‘பராசக்தி’ படத்திலும் நடித்து வருகிறார்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.