சினிமா / TV

கூலி 1000  கோடி வசூல் அடிக்க வாய்ப்பு இல்லை? ஏ ஆர் முருகதாஸின் பேட்டியால் அதிர்ச்சி!

கூலி 1000 கோடி வசூல்?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியான “கூலி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிகளவு எதிர்பார்ப்புகள் உடைய திரைப்படமாக அமைந்தது. ஆனால் இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது. 

சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான “புஷ்பா 2” திரைப்படம் ரூ.1000 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. தமிழில் இது வரை எந்த பெரிய ஹீரோ திரைப்படமும் ஆயிரம் கோடி வசூல் செய்ததில்லை. அந்த வகையில் “கூலி” திரைப்படம் நிச்சயம் ரூ.1000 கோடி வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழ் திரைப்படங்கள் ரூ.1000 கோடி வசூல் செய்யாததற்கான காரணத்தை குறித்து ஒரு பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார் ஏ ஆர் முருகதாஸ்.

இதுதான் காரணம்?

“மற்ற மொழி திரைப்படங்கள் ரூ.1000 கோடி வசூல் செய்கின்றன. அவர்கள் பொழுதுபோக்கிற்காக மட்டுமே படம் எடுக்கிறார்கள். ஆனால் தமிழ் இயக்குனர்களோ படத்தின் மூலம் கல்வி கற்பிக்கிறார்கள். இதனால்தான் மற்ற திரைப்படத்துறைக்கும் தமிழ் திரைப்படத்துறைக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது” என ஏ ஆர் முருகதாஸ் விளக்கம் அளித்துள்ளார். இவரின் பேட்டி இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் “கூலி படம் 1000 கோடி அடிக்க வாய்ப்பில்லையா?” என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

ஏ ஆர் முருகதாஸ் சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்துள்ளார். இத்திரைப்படம் செப்டம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.